பி.ஆர்.ஓ. தற்காலிக தொழிலாளர்களுக்கும் சிறப்பு வசதி: ராஜ்நாத் சிங் ஒப்புதல்!
Jul 27, 2025, 08:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பி.ஆர்.ஓ. தற்காலிக தொழிலாளர்களுக்கும் சிறப்பு வசதி: ராஜ்நாத் சிங் ஒப்புதல்!

சடலங்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் விரிவுபடுத்தல்! 

Web Desk by Web Desk
Sep 24, 2023, 04:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எல்லை சாலைகள் அமைப்பின் (பி.ஆர்.ஓ.) பொது ரிசர்வ் பொறியாளர் படை (ஜி.ஆர்.இ.எஃப்) பணியாளர்களுக்கு கிடைக்கக் கூடிய ‘சடலங்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து’ விதிகளை, தற்காலிக ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கும் (சி.பி.எல்.) நீட்டிக்க மத்திய  பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்திருக்கிறார். அதேபோல, சி.பி.எல்.களுக்கான ஈமச்சடங்கு செலவை 1,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தவும் ஒப்புதல் அளித்திருக்கிறார்.

பி.ஆர்.ஓ. திட்டங்களின்போது  அரசுப் பணியில் இருக்கும் எந்தவொரு தற்காலிக ஊதியம் பெரும் தொழிலாளர் இறந்தாலும், அவரது இறுதிச் சடங்குகள் பணித்தளத்திலேயே செய்யப்பட்டு வருகின்றன. முன்னோக்கிய/எல்லைப் பகுதிகளில் சாலைகளை நிர்மாணிப்பதற்காக சி.பி.எல்.கள் பி.ஆர்.ஓ.வால் பணியமர்த்தப்படுகின்றனர். இவர்கள் பாதகமான காலநிலை மற்றும் கடினமான வேலை நிலைமைகளில் பி.ஆர்.ஓ. ஊழியர்களுடன் கைகோர்த்து வேலை செய்கிறார்கள். இது சில நேரங்களில் உயிரிழப்புகளை ஏற்படுத்தி விடுகிறது.

இவ்வாறு உயிரிழக்கும் தொழிலாளர்களின் சடலங்களை அரசு செலவில் பாதுகாத்து, சொந்த ஊருக்குக் கொண்டு செல்லும் வசதி, ஜி.ஆர்.இ.எஃப். பணியாளர்களுக்கு மட்டுமே இருந்து வந்தது. அதேசமயம், சி.பி.எல்.களுக்கு இந்த வசதி மறுக்கப்பட்டது. இவர்கள் உயிரிழக்கும் பட்சத்தில், போக்குவரத்து சுமை, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மீது விழுகிறது. எனவே, நிதி ஆதாரங்கள் இல்லாததால், பெரும்பாலான நிலைமைகளில் விமான கட்டணம் அல்லது சாலை வழியான போக்குவரத்து செலவுகளைக் கூட இறந்தவரின் குடும்பத்தினரால்  தாங்க முடியவில்லை.

துக்கத்தில் இருக்கும் ஒரு குடும்பம் பெரும்பாலும் இறுதிச் சடங்கு மற்றும் பிற தொடர்புடைய செலவுகளைச் சமாளிப்பது மிகவும் கடினம். இத்தகைய சூழ்நிலைகளில், இறந்த சி.பி.எல்.களின் நெருங்கிய உறவினர்கள்/சட்டப்பூர்வ வாரிசுகள், தேசத்திற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த உறவினர்களின் இறுதிச் சடங்குகளைச் செய்வதன் மூலம் அஞ்சலி செலுத்த வாய்ப்புக் கிடைக்காது. இந்த சூழலில், பி.ஆர்.ஓ. பணித்தளங்களுக்குச் சென்ற மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சி.பி.எல்.களின் கடினமான வேலை நிலைமைகளைக் கண்டார்.

இதையடுத்து, சி.பி.எல்.களின் நலனில் அக்கறை கொண்ட அவர், தற்காலிகத் தொழிலாளர்களுக்கான நலத் திட்டங்களை வகுக்குமாறு, பி.ஆர்.ஓ.வுக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, எல்லை சாலைகள் அமைப்பின் (பி.ஆர்.ஓ.) பொது ரிசர்வ் பொறியாளர் படை (ஜி.ஆர்.இ.எஃப்) பணியாளர்களுக்கு கிடைக்கக் கூடிய ‘சடலங்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து’ விதிகளை, தற்காலிக ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கும் (சி.பி.எல்.) நீட்டிக்க மத்திய  பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்திருக்கிறார். அதேபோல, சி.பி.எல்.களுக்கான ஈமச்சடங்கு செலவை 1,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தவும் ஒப்புதல் அளித்திருக்கிறார். இந்த புதிய நலத் திட்டங்கள், உயிரிழந்தவர்களுக்கு கண்ணியமான இறுதிச் சடங்குகளைச் செய்ய உதவும்.

Tags: Rajnath SinghBROCPL
ShareTweetSendShare
Previous Post

Next Post

3 வது சதத்தை பதிவு செய்த ஸ்ரேயாஸ் ஐயர் !

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies