பி.ஆர்.ஓ. தற்காலிக தொழிலாளர்களுக்கும் சிறப்பு வசதி: ராஜ்நாத் சிங் ஒப்புதல்!
Jun 14, 2026, 10:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பி.ஆர்.ஓ. தற்காலிக தொழிலாளர்களுக்கும் சிறப்பு வசதி: ராஜ்நாத் சிங் ஒப்புதல்!

சடலங்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் விரிவுபடுத்தல்! 

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 24, 2023, 04:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எல்லை சாலைகள் அமைப்பின் (பி.ஆர்.ஓ.) பொது ரிசர்வ் பொறியாளர் படை (ஜி.ஆர்.இ.எஃப்) பணியாளர்களுக்கு கிடைக்கக் கூடிய ‘சடலங்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து’ விதிகளை, தற்காலிக ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கும் (சி.பி.எல்.) நீட்டிக்க மத்திய  பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்திருக்கிறார். அதேபோல, சி.பி.எல்.களுக்கான ஈமச்சடங்கு செலவை 1,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தவும் ஒப்புதல் அளித்திருக்கிறார்.

பி.ஆர்.ஓ. திட்டங்களின்போது  அரசுப் பணியில் இருக்கும் எந்தவொரு தற்காலிக ஊதியம் பெரும் தொழிலாளர் இறந்தாலும், அவரது இறுதிச் சடங்குகள் பணித்தளத்திலேயே செய்யப்பட்டு வருகின்றன. முன்னோக்கிய/எல்லைப் பகுதிகளில் சாலைகளை நிர்மாணிப்பதற்காக சி.பி.எல்.கள் பி.ஆர்.ஓ.வால் பணியமர்த்தப்படுகின்றனர். இவர்கள் பாதகமான காலநிலை மற்றும் கடினமான வேலை நிலைமைகளில் பி.ஆர்.ஓ. ஊழியர்களுடன் கைகோர்த்து வேலை செய்கிறார்கள். இது சில நேரங்களில் உயிரிழப்புகளை ஏற்படுத்தி விடுகிறது.

இவ்வாறு உயிரிழக்கும் தொழிலாளர்களின் சடலங்களை அரசு செலவில் பாதுகாத்து, சொந்த ஊருக்குக் கொண்டு செல்லும் வசதி, ஜி.ஆர்.இ.எஃப். பணியாளர்களுக்கு மட்டுமே இருந்து வந்தது. அதேசமயம், சி.பி.எல்.களுக்கு இந்த வசதி மறுக்கப்பட்டது. இவர்கள் உயிரிழக்கும் பட்சத்தில், போக்குவரத்து சுமை, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மீது விழுகிறது. எனவே, நிதி ஆதாரங்கள் இல்லாததால், பெரும்பாலான நிலைமைகளில் விமான கட்டணம் அல்லது சாலை வழியான போக்குவரத்து செலவுகளைக் கூட இறந்தவரின் குடும்பத்தினரால்  தாங்க முடியவில்லை.

துக்கத்தில் இருக்கும் ஒரு குடும்பம் பெரும்பாலும் இறுதிச் சடங்கு மற்றும் பிற தொடர்புடைய செலவுகளைச் சமாளிப்பது மிகவும் கடினம். இத்தகைய சூழ்நிலைகளில், இறந்த சி.பி.எல்.களின் நெருங்கிய உறவினர்கள்/சட்டப்பூர்வ வாரிசுகள், தேசத்திற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த உறவினர்களின் இறுதிச் சடங்குகளைச் செய்வதன் மூலம் அஞ்சலி செலுத்த வாய்ப்புக் கிடைக்காது. இந்த சூழலில், பி.ஆர்.ஓ. பணித்தளங்களுக்குச் சென்ற மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சி.பி.எல்.களின் கடினமான வேலை நிலைமைகளைக் கண்டார்.

இதையடுத்து, சி.பி.எல்.களின் நலனில் அக்கறை கொண்ட அவர், தற்காலிகத் தொழிலாளர்களுக்கான நலத் திட்டங்களை வகுக்குமாறு, பி.ஆர்.ஓ.வுக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, எல்லை சாலைகள் அமைப்பின் (பி.ஆர்.ஓ.) பொது ரிசர்வ் பொறியாளர் படை (ஜி.ஆர்.இ.எஃப்) பணியாளர்களுக்கு கிடைக்கக் கூடிய ‘சடலங்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து’ விதிகளை, தற்காலிக ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கும் (சி.பி.எல்.) நீட்டிக்க மத்திய  பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்திருக்கிறார். அதேபோல, சி.பி.எல்.களுக்கான ஈமச்சடங்கு செலவை 1,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தவும் ஒப்புதல் அளித்திருக்கிறார். இந்த புதிய நலத் திட்டங்கள், உயிரிழந்தவர்களுக்கு கண்ணியமான இறுதிச் சடங்குகளைச் செய்ய உதவும்.

Tags: Rajnath SinghBROCPL
ShareTweetSendShare
Previous Post

Next Post

3 வது சதத்தை பதிவு செய்த ஸ்ரேயாஸ் ஐயர் !

Related News

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies