Tamil Janam TV
Sep 13, 2026, 01:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருமலையில் இ-பேருந்து திருட்டு - மர்ம நபர்கள் அட்டூழியம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 24, 2023, 04:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருமலை திருப்பதியில், பக்தர்களுக்கு இலவச சேவை செய்து வந்த இ – பேருந்தை மர்ம நபர்கள் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி திருமலையில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இவ்வாறு வரும் பக்தர்களின் நலன் கருதி, இலவசமாகப் பயன்படுத்த மின்சார பேருந்து சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிகர-பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை அடைவதை இலக்காகக் கொண்டுள்ளது. எனவே, திருமலையைப் பசுமை நகரமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

தற்போது, டீசலில் இயங்கி வரும் பேருந்துகளை படிப்படியாக நிறுத்தவும், திருமலையைச் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக, மின்சார பேருந்து தொடங்கப்பட்டுள்ளன என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

மார்ச் 27 அன்று, திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி, மின்சார பேருந்துகளைத் தொடங்கி வைத்தனர். இந்த இ -பேருந்தின் விலை சுமார் ரூ. 1.80 கோடி ஆகும்.

இதன் முதல் கட்டமாக 35 இ-பேருந்துகள் அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டன. தற்போதைய நிலவரப்படி, ஆந்திரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் திருமலை – திருப்பதி சாலையில் 64 இ-பேருந்துகளை இயக்கி வருகிறது.

இந்த நிலையில், திருமலையில் இலவச மின்சார பேருந்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளதாக காவல்துறையினருக்குப் புகார் வந்தது. இதனையடுத்து, அந்த பேருந்து எங்கு உள்ளது என ஜிபிஎஸ் கருவி மூலம் தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது, அந்த பேருந்து, அதிகாலை 3.53 மணிக்கு ஜிஎன்சி சுங்கச்சாவடியை மின்சார பேருந்து கடந்துள்ளதும், நாயுடு பேட்டையில் பேருந்து இருப்பதையும் கண்டறிந்தனர். இது தொடர்பாக, வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே, திருமலை திருப்பதி சுகாதார அதிகாரியின் மின்சார கார் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருடப்பட்டது குறிப்பிட்டதக்கது.

Tags: tirupathi thirumalaitirupathi theft
Share
Tweet
SendShare
Previous Post

திரும்பத்திரும்பப் பொய்களை பரப்புவதா? – திமுகவுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்

Next Post

பி.ஆர்.ஓ. தற்காலிக தொழிலாளர்களுக்கும் சிறப்பு வசதி: ராஜ்நாத் சிங் ஒப்புதல்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies