இந்தியப் பெருங்கடலில் அத்துமீறும் சீனா: இந்தியா "செக்"!
Jan 14, 2026, 05:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியப் பெருங்கடலில் அத்துமீறும் சீனா: இந்தியா “செக்”!

ஓமன், மொரீஷியஸில் கப்பல், விமானப் படைத்தளம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 24, 2023, 08:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியப் பெருங்கடலில் அத்துமீறி ஊடுருவி வரும் சீனாவுக்கு செக் வைக்கும் வகையில், ஓமன் மற்றும் மொரீஷியஸ் நாடுகளின் கடற்பகுதிகளில் கப்பல் மற்றும் விமானப் படைத்தளம் அமைக்கும் பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தி இருக்கிறது.

அண்டை நாடான சீனா, எல்லை விவகாரம் தொடர்பாக அவ்வப்போது அத்துமீறி வருகிறது. இதனால், இரு நாடுகளுக்கிடையே உரசல்போக்கு நிலவி வருகிறது. அதேபோல, நமது நாட்டின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தை, சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. மேலும், நமது நாட்டின் படைகளை குறிவைத்து நிலம் மற்றும் கடல்வழியாக நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர் மிரட்டல் விடுத்து வருகிறது.

இந்திய பெருங்கடல் குறித்த மத்திய அரசின் தரவுகளின்படி, இந்தாண்டில் மட்டும் சராசரியாக மாதம்தோறும் சீன கடற்படையின் 6 போர்க்கப்பல்கள், இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் வந்திருப்பது தெரியவந்திருக்கிறது. மேலும், சீனாவுக்குச் சொந்தமான ஆய்வுக் கப்பலான ‘யுவான் வாங் 5’ கடந்தாண்டு ஆகஸ்ட் மாதமும், மற்றொரு கப்பலான ‘ஷையாங் 24 ஹவோ’ இந்தாண்டு ஆகஸ்ட் மாதமும் இலங்கையின் கொழும்பு துறைமுகத்துக்கு வந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

ஆகவே, சீனாவின் அடாவடிக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கிவிட்டிருக்கிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்திருக்கும் மத்திய கிழக்கு நாடான ஓமன் நாட்டிலும், கிழக்கு ஆப்ரிக்க தீவு நாடான மொரீஷியஸ் நாட்டிலும் அதிநவீன படைத்தளங்களை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஓமனில் உள்ள நுக்ம் துறைமுகத்தில் ஒரு தளத்தை நிறுவியுள்ள மத்திய அரசு, அதை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பணிகளை மேற்கொண்டிருக்கிறது.

இங்கு, நமது நாட்டுக் கப்பல்களைப் பராமரிக்கவும், பழுது பார்க்கவும், மாற்றியமைக்கவும், இந்திய கடற்படை கப்பல்களுக்கு தங்கும் இடம், எரிபொருள் மற்றும் ஓய்வு வசதிகளை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல, மொரீஷியசிஸ் நாட்டின் அகலேகா தீவில் விமானப் படைத்தளம் அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. பழங்குடியினர் மட்டுமே வசிக்கும் இப்பகுதிக்கு, 2015-ல் சென்ற பிரதமர் மோடி, பல்வேறு கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதையடுத்து, அங்கிருந்த பழைய விமான ஓடுபாதை, பெரிய விமானங்கள் தரையிறங்கும் வகையில் புதுப்பிக்கப்பட்டது. மேலும், இராணுவ வீரர்களுக்கான குடியிருப்புகள், பயிற்சிக் கூடங்கள், மைதானம் போன்றவை அடுத்தடுத்து அமைக்கப்பட்டன. நவீன கண்காணிப்புக்கான ரேடார்கள், எரிபொருள் கிடங்குகள், கப்பல்கள் வந்து செல்ல உதவியாக துறைமுக இறங்கு தளங்கள் என பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவை அனைத்தும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த 2 படைத்தளங்களையும், தகவல் கண்காணிப்பு இடைமறிப்பு, கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்துக் கண்காணிப்பு ஆகிய பணிகளுக்கு, இந்தியாவால் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்தியப் பெருங்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பணிகள் சீனாவுக்கு நிச்சயம் நெருக்கடியை அளிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

Tags: central governmentmauritiusintensified worknaval air forceOman
ShareTweetSendShare
Previous Post

அரசு ஆயுஷ் பாரா மெடிக்கல் பள்ளி: மருந்தாளுநர் மற்றும் நர்சிங் தெரபிக்கு விண்ணப்பம் வரவேற்பு

Next Post

திமுகவுக்குத் தெரிந்தது ஜாதி அரசியல், பண அரசியல் மட்டும்தான்- அண்ணாமலை விமர்சனம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies