ஒரு நாள் கிரிக்கெட் போட்டி : இந்தியா பேட்டிங் !
Jul 24, 2025, 05:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி : இந்தியா பேட்டிங் !

Web Desk by Web Desk
Sep 24, 2023, 04:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

தற்போது ஒரு நாள் இடைவேளையில் மீண்டும் போட்டி நடைபெறுவதால், ஆஸ்திரேலியா அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் இன்றைய ஆட்டத்தில் விளையாடாமல் ஓய்வு எடுத்துக் கொண்டார்.

அவருக்கு பதில் கேப்டனாக ஸ்மித் பதவி ஏற்றார். இந்த நிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் முதலில் பந்து வீசுவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “ஆடுகளம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. இந்த ஆடுகளம் சேசிங்கிற்கு தான் உதவும் என நான் நினைக்கிறேன். மேலும் இரவு நேரத்தில் பனிப்பொழிவு வரும் என்பதால் பந்து வீச கடினமாகவும் பேட்டிங் செய்ய சுலபமாகவும் இருக்கும்.

இன்றைய ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற விரும்புகிறோம். அதே சமயம் எந்தெந்த வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து விளையாட வைக்க வேண்டும் என்பது குறித்தும் பரிசோதிக்க இருக்கிறோம். இதனால் இன்றைய ஆட்டத்தில் நாங்கள் பல மாற்றங்களை செய்திருக்கிறோம். இன்றைய ஆட்டத்தில் ஸ்பென்சர் ஜான்சன் விளையாடுகிறார். ஹேசல்வுட் அணிக்கு திரும்பி இருக்கிறார்” என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய கேப்டன் கே எல் ராகுல், ” நாங்களும் முதலில் பந்து வீசதான் முடிவு செய்தோம். ஏனென்றால் இந்த மைதானம் மிகவும் சிறியது. இதனால் இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது எத்தனை ரன்களை சேசிங் செய்ய வேண்டும் என்பது குறித்து ஒரு தெளிவு இருக்கும். தற்போது முதலில் பேட்டிங் செய்வதால் பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறோம்.

எங்கள் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதில் பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்ந்து இருக்கிறார். எங்களுடைய அனைத்து பேட்ஸ்மேன்களும் களத்தில் நின்று நேரத்தை செலவிடுவது மிகவும் முக்கியமாக கருதுகிறோம்.உலகக்கோப்பை தொடருக்கும் முன்பு மனதளவிலும் உடலளவிலும் சில வீரர்களுக்கு ஓய்வு தேவைப்படுவதால்,இந்த மாற்றத்தை செய்திருக்கிறோம் என்று” கூறினார்.

Tags: india vs Australiaoneday cricket
ShareTweetSendShare
Previous Post

3 வது சதத்தை பதிவு செய்த ஸ்ரேயாஸ் ஐயர் !

Next Post

சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல 4 நாட்கள் அனுமதி!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

Load More

அண்மைச் செய்திகள்

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies