ஒரு நாள் கிரிக்கெட் போட்டி : இந்தியா பேட்டிங் !
Sep 13, 2026, 01:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி : இந்தியா பேட்டிங் !

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 24, 2023, 04:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

தற்போது ஒரு நாள் இடைவேளையில் மீண்டும் போட்டி நடைபெறுவதால், ஆஸ்திரேலியா அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் இன்றைய ஆட்டத்தில் விளையாடாமல் ஓய்வு எடுத்துக் கொண்டார்.

அவருக்கு பதில் கேப்டனாக ஸ்மித் பதவி ஏற்றார். இந்த நிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் முதலில் பந்து வீசுவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “ஆடுகளம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. இந்த ஆடுகளம் சேசிங்கிற்கு தான் உதவும் என நான் நினைக்கிறேன். மேலும் இரவு நேரத்தில் பனிப்பொழிவு வரும் என்பதால் பந்து வீச கடினமாகவும் பேட்டிங் செய்ய சுலபமாகவும் இருக்கும்.

இன்றைய ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற விரும்புகிறோம். அதே சமயம் எந்தெந்த வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து விளையாட வைக்க வேண்டும் என்பது குறித்தும் பரிசோதிக்க இருக்கிறோம். இதனால் இன்றைய ஆட்டத்தில் நாங்கள் பல மாற்றங்களை செய்திருக்கிறோம். இன்றைய ஆட்டத்தில் ஸ்பென்சர் ஜான்சன் விளையாடுகிறார். ஹேசல்வுட் அணிக்கு திரும்பி இருக்கிறார்” என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய கேப்டன் கே எல் ராகுல், ” நாங்களும் முதலில் பந்து வீசதான் முடிவு செய்தோம். ஏனென்றால் இந்த மைதானம் மிகவும் சிறியது. இதனால் இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது எத்தனை ரன்களை சேசிங் செய்ய வேண்டும் என்பது குறித்து ஒரு தெளிவு இருக்கும். தற்போது முதலில் பேட்டிங் செய்வதால் பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறோம்.

எங்கள் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதில் பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்ந்து இருக்கிறார். எங்களுடைய அனைத்து பேட்ஸ்மேன்களும் களத்தில் நின்று நேரத்தை செலவிடுவது மிகவும் முக்கியமாக கருதுகிறோம்.உலகக்கோப்பை தொடருக்கும் முன்பு மனதளவிலும் உடலளவிலும் சில வீரர்களுக்கு ஓய்வு தேவைப்படுவதால்,இந்த மாற்றத்தை செய்திருக்கிறோம் என்று” கூறினார்.

Tags: india vs Australiaoneday cricket
Share
Tweet
SendShare
Previous Post

3 வது சதத்தை பதிவு செய்த ஸ்ரேயாஸ் ஐயர் !

Next Post

சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல 4 நாட்கள் அனுமதி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies