வளர்ச்சி சார்ந்த சவால்களில் ஒத்துழைப்பு: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
Jan 14, 2026, 09:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வளர்ச்சி சார்ந்த சவால்களில் ஒத்துழைப்பு: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 24, 2023, 04:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வளர்ச்சி சார்ந்த சவால்களை எதிர்கொள்வதில் இந்தியா ஒத்துழைப்பு வழங்கும் என்று அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையிலான குழு ஐ.நா. பொதுச்சபையின் உயர்மட்ட கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தெற்குலக நாடுகளுக்கு இந்தியாவின் தொடா் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், ‘தெற்குலக நாடுகளின் வளர்ச்சியில் இந்தியா – ஐ.நா.’ என்ற தலைப்பிலான கருத்தரங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதில் அவர் பேசியதாவது, “இந்த ஆண்டு இறுதி வரை நாங்கள் தான் ஜி20-க்கு தலைமையாக இருப்போம். ஜி20 பதவிக்காலம் இருக்கும் போதும், முடிந்த பிறகும், நாங்கள் பங்களிப்பாளராகவும், சிறந்த கூட்டாளியாகவும், கூட்டணி அமைப்பவராகவும் செயல்படுவோம்.

இதன் மூலம் மற்றவர்களையும் வளர்ச்சிக்கான சவால்களை எதிர்கொள்ளச் செய்வதில், நாங்கள் உதாரணமாக இருப்போம். எங்களது அனுபவங்கள் மற்றும் சாதனைகளை நல்ல விதத்தில் ஊக்கமளிக்கும் வகையில், உங்களுடன் பகிர்ந்து கொள்வோம் என்று தெரிவித்தார்.

மேலும், இவை பல விதங்களில் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். ஒத்துழைப்பு விவகாரத்தில், நாங்கள் எப்போதும் பேச்சுவார்த்தைக்குத் தயாராகவே இருந்து இருக்கிறோம். இந்த விவகாரத்தில் ஆப்பிரிக்க யூனியனை ஜி20-இல் இணைத்ததை நாங்கள் மேற்கோள்காட்டுகிறோம் என்றார். மேலும், இது தொடர்பான ஒத்துழைப்பு ஜி20-இல் மட்டுமின்றி அதை கடந்தும் தொடரும் என்றே நம்புகிறேன்,” என்று அவர் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வரும் 26-ந் தேதி 78-வது ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் உயர்மட்ட அமர்வில் உரையாற்ற உள்ளார். மேலும், வாஷிங்டனில் செப்டம்பர் 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், வெளியுறவுத்துறைச் செயலர், அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த உறுப்பினர்கள், அமெரிக்க வணிகத் தலைவர்கள் மற்றும் சிந்தனையாளர்களுடன் இந்திய அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடல் நடத்த உள்ளார்.

பின்னர், வாழும் கலை (Art of Living) அமைப்பு நடத்தும் 4-வது உலக கலாச்சார விழாவில் ஜெய்சங்கர் உரையாற்றுகிறார்.

Tags: jaishankerexternal affairs minister
ShareTweetSendShare
Previous Post

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Next Post

இந்தோ-பசிபிக் படைகளின் தலைவர்கள் மாநாடு..!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies