வளர்ச்சி சார்ந்த சவால்களில் ஒத்துழைப்பு: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
Jul 28, 2026, 09:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வளர்ச்சி சார்ந்த சவால்களில் ஒத்துழைப்பு: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 24, 2023, 04:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வளர்ச்சி சார்ந்த சவால்களை எதிர்கொள்வதில் இந்தியா ஒத்துழைப்பு வழங்கும் என்று அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையிலான குழு ஐ.நா. பொதுச்சபையின் உயர்மட்ட கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தெற்குலக நாடுகளுக்கு இந்தியாவின் தொடா் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், ‘தெற்குலக நாடுகளின் வளர்ச்சியில் இந்தியா – ஐ.நா.’ என்ற தலைப்பிலான கருத்தரங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதில் அவர் பேசியதாவது, “இந்த ஆண்டு இறுதி வரை நாங்கள் தான் ஜி20-க்கு தலைமையாக இருப்போம். ஜி20 பதவிக்காலம் இருக்கும் போதும், முடிந்த பிறகும், நாங்கள் பங்களிப்பாளராகவும், சிறந்த கூட்டாளியாகவும், கூட்டணி அமைப்பவராகவும் செயல்படுவோம்.

இதன் மூலம் மற்றவர்களையும் வளர்ச்சிக்கான சவால்களை எதிர்கொள்ளச் செய்வதில், நாங்கள் உதாரணமாக இருப்போம். எங்களது அனுபவங்கள் மற்றும் சாதனைகளை நல்ல விதத்தில் ஊக்கமளிக்கும் வகையில், உங்களுடன் பகிர்ந்து கொள்வோம் என்று தெரிவித்தார்.

மேலும், இவை பல விதங்களில் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். ஒத்துழைப்பு விவகாரத்தில், நாங்கள் எப்போதும் பேச்சுவார்த்தைக்குத் தயாராகவே இருந்து இருக்கிறோம். இந்த விவகாரத்தில் ஆப்பிரிக்க யூனியனை ஜி20-இல் இணைத்ததை நாங்கள் மேற்கோள்காட்டுகிறோம் என்றார். மேலும், இது தொடர்பான ஒத்துழைப்பு ஜி20-இல் மட்டுமின்றி அதை கடந்தும் தொடரும் என்றே நம்புகிறேன்,” என்று அவர் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வரும் 26-ந் தேதி 78-வது ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் உயர்மட்ட அமர்வில் உரையாற்ற உள்ளார். மேலும், வாஷிங்டனில் செப்டம்பர் 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், வெளியுறவுத்துறைச் செயலர், அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த உறுப்பினர்கள், அமெரிக்க வணிகத் தலைவர்கள் மற்றும் சிந்தனையாளர்களுடன் இந்திய அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடல் நடத்த உள்ளார்.

பின்னர், வாழும் கலை (Art of Living) அமைப்பு நடத்தும் 4-வது உலக கலாச்சார விழாவில் ஜெய்சங்கர் உரையாற்றுகிறார்.

Tags: jaishankerexternal affairs minister
ShareTweetSendShare
Previous Post

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Next Post

இந்தோ-பசிபிக் படைகளின் தலைவர்கள் மாநாடு..!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies