உலகில் கடவுளுக்கு எப்படி ஒரு சக்தி உள்ளதோ அதுபோல், சனாதன தர்த்திற்கும் என்று ஒரு சக்தி உள்ளது என உச்ச நீதிமன்றத்தின் கூடுதல் சொலிட்டர் ஜெனரல் வெங்கட்ராமன் கருத்து தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் பாலக்கோடு அருகே நடைபெற்ற பிராமணர் சங்க விழா நடைபெற்றது. இதில், உச்ச நீதிமன்றத்தின் கூடுதல் சொலிட்டர் ஜெனரல் வெங்கட்ராமன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, அவர் பேசுகையில், சுயநலவாதிகள் வாழ்ந்து வரும் இந்த காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். அதுமட்டுமல்ல, தானம், தர்மம் செய்ய கணக்கு பார்ப்பவர்கள் மத்தியில் வாழ்ந்து வருகிறோம். ஒவ்வொரு மனிதனுக்கும் சகிப்புத்தன்மை மற்றும் தியாகம் மிகவும் முக்கியமானது. அதனைப் பெற சனாதன தர்மத்தை பின்பற்ற வேண்டும்.
காற்று, நீர், ஆகாயம் என பஞ்ச பூதங்களில் எப்படி கடவுளின் சக்தி உள்ளதோ அதுபோல், சனாதன தர்த்திலும் கடவுள் இருக்கிறார். இதை நாம் யாரும் மறந்துவிடக்கூடாது.
சனாதனத்தை நாம் அனைவரும் தவறாது பின்பற்ற வேண்டும். சனாதனம் பற்றி அறிந்து கொள்ளாமல், அதில் உள்ளது அது பற்றி பேசக்கூடாது. அது ஒரு பாவச்செயல் என்றார்.
இந்த நிகழ்ச்சியில், சமஸ்கிருத பல்கலைக்கழக போராசிரியர் ஆழ்வார், பல மொழி மற்றும் ஊடக வல்லுனர் ஷிபயில் வைத்தியா, கர்நாடக வங்கித் தலைவர் பிரதீப் குமார், பெங்களூர் ஐஐம் பேராசிரியர் மகாதேவன், மும்பை ஐஐடி பேராசிரியர் ராமசுப்பிரமணியன், வேத அறிஞர் மற்றும் மேலாண்மைக்குரு சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.