செந்தில் பாலாஜி வழக்கு: ED புதிய இயக்குநர் தீவிரம்!
Mar 15, 2026, 05:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செந்தில் பாலாஜி வழக்கு: ED புதிய இயக்குநர் தீவிரம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 24, 2023, 05:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது ஜாமீன் வழக்கு, விரைவில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனால், அதை உடைக்கும் முயற்சியில் அமலாக்கத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 15-ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஹார்ட் அட்டார்க் பிரச்சினை என்று சொன்னதால், தனியார் மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

செந்தில் பாலாஜி மீதான வழக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு ஆகஸ்ட் 14 -ம் தேதி மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி மனுத் தாக்கல் செய்தார். ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது என்ற குழப்பம் ஏற்பட்டது.

இதனால், நாடாளுமன்ற உறுப்பினர், சட்ட மன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திலிருந்து, முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு கடந்த 20 -ம் தேதி முதன்மை அமர்வு நீதிபதி அல்லி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க முடியாது என நீதிபதி உத்தரவிட்டார். இதனால், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தாக்கல் செய்ய செந்தில் பாலாஜி தரப்பு முடிவு செய்துள்ளது.

இதனிடையே, அமலாக்கத்துறை இயக்குநராக இருந்த சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததால், அவருக்குப் பதில் ராகுல் நவீன் என்பவர் இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இவர் பதவியேற்றதும், திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாக டெல்லியிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. இதனால், செந்தில் பாலாஜி ஜாமீனில் விடுதலையாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Tags: supreme courtit raids senthil balaji
ShareTweetSendShare
Previous Post

சனாதன தர்மத்திற்கு ஒரு சக்தி உள்ளது –கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கருத்து

Next Post

விவசாயிகளுக்கு ரூ.2000 – அடுத்த தவணை டெபாசிட் எப்போது?

Related News

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Load More

அண்மைச் செய்திகள்

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies