பா.ஜ.க. கார்யகர்த்தாக்கள் கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு!
Jan 14, 2026, 10:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பா.ஜ.க. கார்யகர்த்தாக்கள் கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு!

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கார்யகர்த்தா மகாகும்ப நிகழ்ச்சி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 25, 2023, 01:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், கார்யகர்த்தா மகாகும்ப நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. ஏற்பாடு செய்திருக்கிறது. இந்நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

இந்தாண்டு இறுதியில் 5 மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில், மத்தியப் பிரதேச மாநிலமும் ஒன்று. இதையடுத்து, இம்மாநிலத்தில் ஆட்சியைத் தக்க வைப்பதற்காக பா.ஜ.க. தீவிர பிரசாரத்தில் களமிறங்கி இருக்கிறது. அந்த வகையில், கடந்த 15-ம் தேதி மத்தியப் பிரதேசத்துக்கு பயணம் மேற்கொண்ட பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 50,700 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இவற்றில் பெட்ரோ கெமிக்கல் வளாகம் மற்றும் மாநிலம் முழுவதும் 10 புதிய தொழில்துறை திட்டங்கள் அடங்கும். குறிப்பாக, பிரதமர் அடிக்கல் நாட்டிய 10 திட்டங்களில் நர்மதாபுரம் மாவட்டத்தில் மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மண்டலம் மற்றும் இந்தூரில் 2 தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், ரத்லமில் ஒரு மெகா தொழில் பூங்கா ஆகியவை முக்கியமான திட்டங்களாகும். இவற்றில் பினா சுத்திகரிப்பு ஆலையில் உள்ள பெட்ரோ கெமிக்கல் வளாகம் நாட்டின் ‘ஆத்ம நிர்பர் பாரத்’ (தன்னம்பிக்கை) திட்டத்தை நனவாக்க உதவும் என்று பிரதமர் கூறியது குறிப்பிடத்தக்கது.

இது தவிர, மக்கள் தொடர்புத் திட்டங்கள் தொடர்பான 5 யாத்திரைகளை பா.ஜ.க. முன்னெடுத்திருக்கிறது. இந்த யாத்திரைகளின் உச்சகட்டமாக, பா.ஜ.க. தொண்டர்களின் ‘கார்யகர்த்தா மகாகும்ப’ என்கிற மாபெரும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. போபாலில் உள்ள ஜம்போரி மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த மாபெரும் கூட்டத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றுகிறார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு மைதானத்தில் ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

கட்சியின் சித்தாந்தவாதியான தீன்தயாள் உபாத்யாயாவின் பிறந்தநாளில் காரியகர்த்தா மகாகும்ப நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மெகா கூட்டத்தில் சுமார் 10 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக பா.ஜ.க. மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

Tags: PM ModiBJP workersmega congregationbhopal
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் என்ன நடக்கிறது? என தெரியாத முதல்வர் ஸ்டாலின்!

Next Post

அமித் ஷா தலைமையில் வடக்கு மண்டல கவுன்சிலின் 31 வது கூட்டம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies