தி.மு.க. அமைச்சர் பொன்முடி வழக்கு: அதி.மு.க. ஜெயக்குமார் ஆஜர்!
Mar 15, 2026, 01:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தி.மு.க. அமைச்சர் பொன்முடி வழக்கு: அதி.மு.க. ஜெயக்குமார் ஆஜர்!

செம்மண் குவாரி வழக்கில் அரசுத் தரப்புக்கு ஆதரவாக விசாரணை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 25, 2023, 06:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தி.மு.க. அமைச்சர் பொன்முடிக்கு எதிரான செம்மண் குவாரி வழக்கில், அரசுத் தரப்புக்கு ஆதரவாக எங்களையும் விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்று தாக்கல் செய்திருந்த மனுவின் அடிப்படையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

கடந்த 2006 – 11 தி.மு.க. ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, கனிமவளத்துறையையும் கூடுதலாக கவனித்து வந்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள பூந்துறை கிராமத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக செம்மண் எடுத்து அரசுக்கு 28.36 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் 2012-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில், பொன்முடி, அவரது மகனும் தற்போதைய கள்ளக்குறிச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு பல ஆண்டுகளாக விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் 64 பேர் அரசுத் தரப்புச் சாட்சியாக சேர்க்கப்பட்டனர். இவர்களில் 11 பேரிடம் செப்டம்பர் 7-ம் தேதி வரை விசாரணை நடத்தப்பட்டது. இதில் 9 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர். ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் 2 மட்டும் தங்களது சாட்சியைப் பதிவு செய்தனர். இவ்வாறு அரசுத் தரப்பு சாட்சிகள் தொடர்ந்து பிறழ் சாட்சியம் அளித்ததால், மேற்படி வழக்கில் தன்னையும் ஒரு மனு தாரராகச் சேர்த்துக் கொண்டு, அரசுத் தரப்புச் சாட்சியாக விசாரிக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பில் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், அந்த மனுவில் அரசுத் தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு எங்களையும் அனுமதிக்க வேண்டும். குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக வாதிட இந்திய பிரதிநிதியான அனைவருக்கும் உரிமை இருக்கிறது. இதுபோன்ற வழக்குகளில் வேறு மாநிலங்களில் மனு தாக்கல் செய்து விசாரணை நடந்து வருகிறது என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த வாரம் நடைபெற்ற நிலையில், ஜெயக்குமாரை செப்டம்பர் 25-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார். அதன்படி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். அப்போது, கடந்த 10 ஆண்டுகளாக நீங்கள்தானே ஆட்சியில் இருந்தீர்கள். அப்போது, இதுபற்றி ஏன் கேள்வி எழுப்பவில்லை? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி பூர்ணிமா, மேற்கண்ட ஏற்பது தொடர்பாக அக்டோபர் 3-ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: DMK Ministerponmudi quarry caseADMK Jayakumarappeared
ShareTweetSendShare
Previous Post

கேரளாவில் இராணுவ வீரருக்கே பாதுகாப்பில்லை!

Next Post

ஜம்மு காஷ்மீரில் 5 தீவிரவாதிகள் கைது!

Related News

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More

அண்மைச் செய்திகள்

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies