தி.மு.க. அமைச்சர் பொன்முடி வழக்கு: அதி.மு.க. ஜெயக்குமார் ஆஜர்!
Jul 24, 2025, 06:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தி.மு.க. அமைச்சர் பொன்முடி வழக்கு: அதி.மு.க. ஜெயக்குமார் ஆஜர்!

செம்மண் குவாரி வழக்கில் அரசுத் தரப்புக்கு ஆதரவாக விசாரணை!

Web Desk by Web Desk
Sep 25, 2023, 06:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தி.மு.க. அமைச்சர் பொன்முடிக்கு எதிரான செம்மண் குவாரி வழக்கில், அரசுத் தரப்புக்கு ஆதரவாக எங்களையும் விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்று தாக்கல் செய்திருந்த மனுவின் அடிப்படையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

கடந்த 2006 – 11 தி.மு.க. ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, கனிமவளத்துறையையும் கூடுதலாக கவனித்து வந்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள பூந்துறை கிராமத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக செம்மண் எடுத்து அரசுக்கு 28.36 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் 2012-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில், பொன்முடி, அவரது மகனும் தற்போதைய கள்ளக்குறிச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு பல ஆண்டுகளாக விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் 64 பேர் அரசுத் தரப்புச் சாட்சியாக சேர்க்கப்பட்டனர். இவர்களில் 11 பேரிடம் செப்டம்பர் 7-ம் தேதி வரை விசாரணை நடத்தப்பட்டது. இதில் 9 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர். ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் 2 மட்டும் தங்களது சாட்சியைப் பதிவு செய்தனர். இவ்வாறு அரசுத் தரப்பு சாட்சிகள் தொடர்ந்து பிறழ் சாட்சியம் அளித்ததால், மேற்படி வழக்கில் தன்னையும் ஒரு மனு தாரராகச் சேர்த்துக் கொண்டு, அரசுத் தரப்புச் சாட்சியாக விசாரிக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பில் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், அந்த மனுவில் அரசுத் தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு எங்களையும் அனுமதிக்க வேண்டும். குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக வாதிட இந்திய பிரதிநிதியான அனைவருக்கும் உரிமை இருக்கிறது. இதுபோன்ற வழக்குகளில் வேறு மாநிலங்களில் மனு தாக்கல் செய்து விசாரணை நடந்து வருகிறது என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த வாரம் நடைபெற்ற நிலையில், ஜெயக்குமாரை செப்டம்பர் 25-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார். அதன்படி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். அப்போது, கடந்த 10 ஆண்டுகளாக நீங்கள்தானே ஆட்சியில் இருந்தீர்கள். அப்போது, இதுபற்றி ஏன் கேள்வி எழுப்பவில்லை? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி பூர்ணிமா, மேற்கண்ட ஏற்பது தொடர்பாக அக்டோபர் 3-ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: DMK Ministerponmudi quarry caseADMK Jayakumarappeared
ShareTweetSendShare
Previous Post

கேரளாவில் இராணுவ வீரருக்கே பாதுகாப்பில்லை!

Next Post

ஜம்மு காஷ்மீரில் 5 தீவிரவாதிகள் கைது!

Related News

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

Load More

அண்மைச் செய்திகள்

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies