ஜம்மு காஷ்மீரில் 5 தீவிரவாதிகள் கைது!
Aug 8, 2026, 01:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 5 தீவிரவாதிகள் கைது!

கைத்துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், ஆயுதக் குவியல்கள் பறிமுதல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 25, 2023, 06:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறையினர் இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2 கைத்துப்பாக்கிகள், 3 கையெறி குண்டுகள் மற்றும் ஏராளமான ஆயுதக் குவியல்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் கோகர்நாக் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கும், மாநில காவல்துறையினருக்கும் கடந்த 12-ம் தேதி ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த கூட்டு நடவடிக்கைக் குழுவினர் தீவிர தேடுகல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள், கூட்டு நடவடிக்கைக் குழுவினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில், இராணுவ கர்னல், மேஜர், வீரர் மற்றும் மாநில காவல்துறை டி.எஸ்.பி. என 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, கூடுதல் இராணுவம் வரவழைக்கப்பட்டு தீவிரவாதிகள் வேட்டை தொடங்கியது. ஒரு வாரம் நீடித்த தேடுதல் வேட்டையில் லஷ்கர் இ தொய்பா கமாண்டர் உட்பட மொத்த தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும், எல்லைப் பகுதியிலும் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையிலும், பாதுகாப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக மத்திய ரிசர்வ் காவல்துறையினருக்கும், மாநில காவல்துறையினருக்கும் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த கூட்டு நடவடிக்கைக் குழுவினர் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தீவிரவாதிகள் 5 பேரை கூட்டு நடவடிக்கைக் குழுவினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், மேற்கண்ட 5 பேரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்பதும், அவர்களதுபெயர் ஆதில் ஹுசைன் வானி, சுஹைல் அஹ்மத் தர், ஐத்மத் அஹ்மத் லாவே, மெஹ்ராஜ் அஹ்மத் லோன் மற்றும் சப்சார் அஹ்மத் கர் என்பதும் தெரியவந்தது. பின்னர், அவர்களிடமிருந்து 2 கைத்துப்பாக்கிகள், 3 கையெறி குண்டுகள், ஒரு யு.பி.ஜி.எல்., 2 கைத்துப்பாக்கி மேகசின்கள், 12 பிஸ்டல் ரவுண்டுகள் மற்றும் 21 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக கைமோ காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக மாநில காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

Tags: Arrestjammu kashmirKulgam5 terrorist
Share
Tweet
SendShare
Previous Post

தி.மு.க. அமைச்சர் பொன்முடி வழக்கு: அதி.மு.க. ஜெயக்குமார் ஆஜர்!

Next Post

ராஜஸ்தானில் ஆட்சி மாற்றம் வரும்: பிரதமர் மோடி உறுதி!

Related News

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies