ராஜஸ்தானில் ஆட்சி மாற்றம் வரும்: பிரதமர் மோடி உறுதி!
Sep 14, 2026, 07:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராஜஸ்தானில் ஆட்சி மாற்றம் வரும்: பிரதமர் மோடி உறுதி!

பரிவர்தன் சங்கல்ப் மகாசபா கூட்டத்தில் ஆவேசம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 25, 2023, 07:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காங்கிரஸ் கட்சியின் தவறான ஆட்சியை அகற்ற ராஜஸ்தான் மக்கள் முடிவு செய்து விட்டார்கள். மாநிலத்தின் ஒவ்வொரு மூலையிலும் நடத்தப்பட்ட யாத்திரைக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்திருக்கிறது. ஆகவே, ராஜஸ்தானில் ஆட்சி மாற்றம் வருவது உறுதி என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறது. மேலும், பா.ஜ.க. சார்பில் பல்வேறு யாத்திரைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், ஜெய்ப்பூரில் பரிவர்தன் சங்கல்ப் மகாசபா என்கிற பெயரில் ஒரு மெகா கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, “ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை நடத்திய விதத்திற்காக ஒரு பெரிய பூஜ்ஜியத்தைப் பெற வேண்டும். ராஜஸ்தான் மக்கள் கெலாட் அரசை அகற்றி பா.ஜ.க.வை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். அசோக் கெலாட் அரசு அம்மாநில இளைஞர்களின் 5 ஆண்டு காலத்தை வீணடித்திருக்கிறது. ராஜஸ்தானில் ஆட்சி மாற்றம் வரும். மாநிலத்தின் ஒவ்வொரு மூலையிலும் நடத்தப்பட்ட யாத்திரைக்கு மக்களிடம் இருந்து பெரும் ஆதரவு கிடைத்திருக்கிறது.
எங்களது ‘பரிவர்தன் யாத்திரை’ மூலம் ராஜஸ்தானில் ஏற்படும் மாற்றத்தை என்னால் தெளிவாகப் பார்க்க முடிகிறது.

மாநிலத்தின் ஒவ்வொரு மூலையிலும் நடைபெற்ற மாற்றத்திற்கான அணிவகுப்பு, மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறது. யாத்திரையின்போது எங்களுக்குக் கிடைத்த பாராட்டும், வரவேற்பும் மாநிலத்தில் மாறிவரும் அரசியல் தலையெழுத்துக்கான அறிகுறியாகும். இந்தியா தலைமையில் நடத்தப்பட்ட ஜி20 உச்சி மாநாட்டின் வெற்றியைக் கண்டு, டெல்லியின் நண்பர்களாக இல்லாத நாடுகள் வியந்து போயிருக்கின்றன. பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்தது யார்? நான் அல்ல, உங்களது ஆதரவால்தான் இது சாத்தியமானது.

ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதாக நாங்கள் உத்தரவாதம் அளித்தோம். இன்று, ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை அனைவரும் பார்க்கலாம். காங்கிரசால் 30 ஆண்டுகளுக்கு முன்பே மகளிர் இடஒதுக்கீட்டை கொண்டு வந்திருக்கலாம். ஆனால், பெண்களுக்கு இடஒதுக்கீடு கிடைப்பதை அவர்கள் ஒருபோதும் விரும்பியதில்லை. காங்கிரஸ் மற்றும் ‘திமிர்’ கூட்டணிக் கட்சிகள் பெண்கள் இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள். ஆகவே, காங்கிரஸ் கட்சிக்கு பூஜ்ஜிய மதிப்பெண்கள்தான் கிடைக்க வேண்டும். ராஜஸ்தான் மக்கள் கெலாட் அரசை அகற்றி பாஜ.க.வை மீண்டும் கொண்டு வர முடிவு செய்து விட்டனர்” என்றார்.

Tags: PM ModiSpeechRajasthan
Share
Tweet
SendShare
Previous Post

ஜம்மு காஷ்மீரில் 5 தீவிரவாதிகள் கைது!

Next Post

இந்திய மாணவர்களுக்கு 3 மாதத்தில் 90 ஆயிரம்  விசா வழங்கிய அமெரிக்கா!

Related News

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

Load More

அண்மைச் செய்திகள்

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies