தி.மு.க. அமைச்சர் பொன்முடி வழக்கு: அதி.மு.க. ஜெயக்குமார் ஆஜர்!
Aug 8, 2026, 12:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தி.மு.க. அமைச்சர் பொன்முடி வழக்கு: அதி.மு.க. ஜெயக்குமார் ஆஜர்!

செம்மண் குவாரி வழக்கில் அரசுத் தரப்புக்கு ஆதரவாக விசாரணை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 25, 2023, 06:48 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தி.மு.க. அமைச்சர் பொன்முடிக்கு எதிரான செம்மண் குவாரி வழக்கில், அரசுத் தரப்புக்கு ஆதரவாக எங்களையும் விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்று தாக்கல் செய்திருந்த மனுவின் அடிப்படையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

கடந்த 2006 – 11 தி.மு.க. ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, கனிமவளத்துறையையும் கூடுதலாக கவனித்து வந்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள பூந்துறை கிராமத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக செம்மண் எடுத்து அரசுக்கு 28.36 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் 2012-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில், பொன்முடி, அவரது மகனும் தற்போதைய கள்ளக்குறிச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு பல ஆண்டுகளாக விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் 64 பேர் அரசுத் தரப்புச் சாட்சியாக சேர்க்கப்பட்டனர். இவர்களில் 11 பேரிடம் செப்டம்பர் 7-ம் தேதி வரை விசாரணை நடத்தப்பட்டது. இதில் 9 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர். ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் 2 மட்டும் தங்களது சாட்சியைப் பதிவு செய்தனர். இவ்வாறு அரசுத் தரப்பு சாட்சிகள் தொடர்ந்து பிறழ் சாட்சியம் அளித்ததால், மேற்படி வழக்கில் தன்னையும் ஒரு மனு தாரராகச் சேர்த்துக் கொண்டு, அரசுத் தரப்புச் சாட்சியாக விசாரிக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பில் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், அந்த மனுவில் அரசுத் தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு எங்களையும் அனுமதிக்க வேண்டும். குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக வாதிட இந்திய பிரதிநிதியான அனைவருக்கும் உரிமை இருக்கிறது. இதுபோன்ற வழக்குகளில் வேறு மாநிலங்களில் மனு தாக்கல் செய்து விசாரணை நடந்து வருகிறது என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த வாரம் நடைபெற்ற நிலையில், ஜெயக்குமாரை செப்டம்பர் 25-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார். அதன்படி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். அப்போது, கடந்த 10 ஆண்டுகளாக நீங்கள்தானே ஆட்சியில் இருந்தீர்கள். அப்போது, இதுபற்றி ஏன் கேள்வி எழுப்பவில்லை? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி பூர்ணிமா, மேற்கண்ட ஏற்பது தொடர்பாக அக்டோபர் 3-ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: DMK Ministerponmudi quarry caseADMK Jayakumarappeared
Share
Tweet
SendShare
Previous Post

கேரளாவில் இராணுவ வீரருக்கே பாதுகாப்பில்லை!

Next Post

ஜம்மு காஷ்மீரில் 5 தீவிரவாதிகள் கைது!

Related News

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies