காங்கிரஸ் நக்சலைட்டுகளுடன் கைகோர்த்துச் சத்தீஸ்கரில் மத்திய அரசு திட்டங்களை தடுத்தனர் என பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா குற்றம் சாட்டி உள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளரிடம் பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா,
“சத்தீஸ்கரில் மத்திய அரசு திட்டங்களை மாநில அரசு சரியாக செயல்படுத்துவது இல்லை. மதமாற்ற தடை சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் நின்றது.
சத்தீஸ்கரில் “காங்கிரஸ் நக்சலைட்டுகளுடன் கைகோர்த்து மத்திய அரசின் திட்டங்களைத் தடுத்தனர். பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.6 ஆயிரத்தை காங்கிரஸ் பறித்துள்ளது.
சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியில் கோடிக்கணக்கான ஊழல்கள் நடந்துள்ளன. காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் சுரங்க மாபியா மற்றும் குற்றவாளிகளுக்கு சுதந்திரம் அளிக்கப்படுகிறது.
சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியில் பல பாலியல் வழக்குகளில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சத்தீஸ்கர் மக்களுக்கு காங்கிரஸ் துரோகம் இழைத்துவிட்டனர் எனக் கூறினார்.