உலகக்கோப்பையில் அஸ்வின் விளையாட வாய்ப்புள்ளது - சஞ்சய் பங்கர்!
Nov 15, 2025, 05:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகக்கோப்பையில் அஸ்வின் விளையாட வாய்ப்புள்ளது – சஞ்சய் பங்கர்!

Web Desk by Web Desk
Sep 26, 2023, 07:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் நாளை ராஜ்கோட்டில் 3 வது போட்டி நடைபெறவுள்ளது.

நடந்து முடிந்த இரண்டுப் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிப் பெற்று முன்னிலையில் உள்ளது. மேலும் உலகக் கோப்பைத் தொடர் வரும் 5 ஆம் தேதி தொடங்குகிறது. அதில் இந்தியா தனது முதல் போட்டியை ஆஸ்திரேலியாவுடன் அக்டோபர் 8 ஆம் தேதி விளையாடுகிறது.

இந்நிலையில் இந்திய அணியை குறித்து முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் பேசியுள்ளார். இது குறித்து அவர், ” 15 பேர் கொண்ட உலகக் கோப்பை இந்திய அணியில் கே.எல். ராகுல் மற்றும் இஷான் கிஷன் விக்கெட் கீப்பராக உள்ளனர். அதனால் யாரை கீப்பிங் செய்ய வைப்பது என்னும் கேள்வி பெரியதாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், ” கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக இருந்தால் 5-வது இடத்தில் பேட்டிங் செய்வார் ஸ்ரேயாஸ் 4வது இடத்தில் பேட்டிங் செய்வார். பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தரை விட அஸ்வின் சிறப்பாக விளையாடியதால் அஸ்வின் உலகக் கோப்பைக்கு விளையாட வாய்ப்புள்ளது. இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு அஸ்வின் பந்துவீச்சில் நம்பிக்கை உள்ளது” என்றும் கூறினார்.

அஸ்வின் உலகக்கோப்பையில் பங்குப் பெற்றால் அக்டோபர் 8 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரானப் போட்டியில் அஸ்வின் 8 வது இடத்தில் விளையாட வாய்ப்புள்ளது என்றும் கூறினார்.

கிட்டத்தட்ட 20 மாதங்கள் இந்தியாவின் 50 ஓவர் அணியில் இருந்து வெளியேறிய அஸ்வின், சமீபத்தில் முடிவடைந்த ஆசியக் கோப்பையில் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் காயம் அடைந்ததை அடுத்து, அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.

ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் அக்சர் படேல் பங்குபெற முடியாமல் போனபோதும் அவருக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் அணிக்குள் வந்தார். ஆனால் அந்த போட்டியில் பேட்டிங் செய்யவோ இல்லை பந்துவீசவோ சுந்தருக்கு வாய்ப்புக் கிடையில்லை.

அடுத்து நடைபெற்ற ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டியில் அஸ்வின் சிறப்பாக விளையாடி உள்ளதால் உலகக் கோப்பையில் இடம்பெற அஸ்வின்னுக்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது.

Tags: Cricketaswin cricket
ShareTweetSendShare
Previous Post

ரூ.50 லட்சம் வரை பயணக்காப்பீடு – அசத்தும் ஐ.ஆர்.சி.டி.சி

Next Post

இந்தியாவின் ராஜதந்திரம் புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்!

Related News

அரசியலமைப்பு திருத்தத்துக்கு பாகிஸ்தானின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எதிர்ப்பு!

கேரளாவுக்கு சுற்றுலா சென்ற பிரிட்டன் டிராவல் இன்புளூயன்சர்!

மகாராஷ்டிரா : காரை கழுதைகளில் பூட்டி ஊர்வலமாக இழுத்து சென்ற உரிமையாளர்!

டெல்லி கார் வெடிப்பு தாக்குதலுக்கு உதவிய ஹவாலா முகவர்கள் – புலனாய்வு அமைப்பு விசாரணை!

சுயசார்பு இந்தியா திட்டத்தால் 1 கோடி பதிவிறக்கத்தை கடந்த ’அரட்டை!

விருந்தோம்பலால் இந்தியாவில் குடும்பம் இருப்பது போல உணர்கிறேன் – பிரெஞ்சு பெண்

Load More

அண்மைச் செய்திகள்

கொடைக்கானல் : ஸ்டைலாக போட்டோக்கு போஸ் கொடுத்த பெண்ணை விரட்டிய குரங்கு!

தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி சைக்கிள் பேரணி – உற்சாக வரவேற்பு!

நெல்லை : கையில் தீப ஜோதியுடன் ஸ்கேட்டிங் செய்து அசத்திய பள்ளி மாணவர்கள்!

திருத்தணி : வாகனத்தில் செல்வோர் மீது கற்களை வீசி தாக்கும் வடமாநில இளைஞர்!

திருச்சி : சாட்டை துரைமுருகனை கைது செய்யக் கோரி அமமுக நிர்வாகிகள் போராட்டம்!

தொடர் தோல்விக்கான விருதை ராகுல் காந்தி தவிர வேறு யாரும் வெல்ல முடியாது – அமித் மாள்வியா

முகவரி மாற்றி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய்!

தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் முதலமைச்சர் நாடகமாடுகிறார் – நாராயணன் திருப்பதி குற்றச்சாட்டு!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

நாமக்கல் கிட்னி முறைகேடு விற்பனை : இடைத்தரகர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies