உலகக்கோப்பையில் அஸ்வின் விளையாட வாய்ப்புள்ளது - சஞ்சய் பங்கர்!
Jul 23, 2025, 06:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகக்கோப்பையில் அஸ்வின் விளையாட வாய்ப்புள்ளது – சஞ்சய் பங்கர்!

Web Desk by Web Desk
Sep 26, 2023, 07:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் நாளை ராஜ்கோட்டில் 3 வது போட்டி நடைபெறவுள்ளது.

நடந்து முடிந்த இரண்டுப் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிப் பெற்று முன்னிலையில் உள்ளது. மேலும் உலகக் கோப்பைத் தொடர் வரும் 5 ஆம் தேதி தொடங்குகிறது. அதில் இந்தியா தனது முதல் போட்டியை ஆஸ்திரேலியாவுடன் அக்டோபர் 8 ஆம் தேதி விளையாடுகிறது.

இந்நிலையில் இந்திய அணியை குறித்து முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் பேசியுள்ளார். இது குறித்து அவர், ” 15 பேர் கொண்ட உலகக் கோப்பை இந்திய அணியில் கே.எல். ராகுல் மற்றும் இஷான் கிஷன் விக்கெட் கீப்பராக உள்ளனர். அதனால் யாரை கீப்பிங் செய்ய வைப்பது என்னும் கேள்வி பெரியதாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், ” கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக இருந்தால் 5-வது இடத்தில் பேட்டிங் செய்வார் ஸ்ரேயாஸ் 4வது இடத்தில் பேட்டிங் செய்வார். பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தரை விட அஸ்வின் சிறப்பாக விளையாடியதால் அஸ்வின் உலகக் கோப்பைக்கு விளையாட வாய்ப்புள்ளது. இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு அஸ்வின் பந்துவீச்சில் நம்பிக்கை உள்ளது” என்றும் கூறினார்.

அஸ்வின் உலகக்கோப்பையில் பங்குப் பெற்றால் அக்டோபர் 8 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரானப் போட்டியில் அஸ்வின் 8 வது இடத்தில் விளையாட வாய்ப்புள்ளது என்றும் கூறினார்.

கிட்டத்தட்ட 20 மாதங்கள் இந்தியாவின் 50 ஓவர் அணியில் இருந்து வெளியேறிய அஸ்வின், சமீபத்தில் முடிவடைந்த ஆசியக் கோப்பையில் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் காயம் அடைந்ததை அடுத்து, அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.

ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் அக்சர் படேல் பங்குபெற முடியாமல் போனபோதும் அவருக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் அணிக்குள் வந்தார். ஆனால் அந்த போட்டியில் பேட்டிங் செய்யவோ இல்லை பந்துவீசவோ சுந்தருக்கு வாய்ப்புக் கிடையில்லை.

அடுத்து நடைபெற்ற ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டியில் அஸ்வின் சிறப்பாக விளையாடி உள்ளதால் உலகக் கோப்பையில் இடம்பெற அஸ்வின்னுக்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது.

Tags: Cricketaswin cricket
ShareTweetSendShare
Previous Post

ரூ.50 லட்சம் வரை பயணக்காப்பீடு – அசத்தும் ஐ.ஆர்.சி.டி.சி

Next Post

இந்தியாவின் ராஜதந்திரம் புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

திருப்பதி திருமலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆய்வகம்!

கேரளா : பேருந்து மோதி பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

வியாழக்கிழமை காலை 11 மணி வரை அவைகள் ஒத்திவைப்பு!

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் முப்பெரும் விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies