உலகக்கோப்பையில் அஸ்வின் விளையாட வாய்ப்புள்ளது - சஞ்சய் பங்கர்!
Jan 14, 2026, 09:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகக்கோப்பையில் அஸ்வின் விளையாட வாய்ப்புள்ளது – சஞ்சய் பங்கர்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 26, 2023, 07:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் நாளை ராஜ்கோட்டில் 3 வது போட்டி நடைபெறவுள்ளது.

நடந்து முடிந்த இரண்டுப் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிப் பெற்று முன்னிலையில் உள்ளது. மேலும் உலகக் கோப்பைத் தொடர் வரும் 5 ஆம் தேதி தொடங்குகிறது. அதில் இந்தியா தனது முதல் போட்டியை ஆஸ்திரேலியாவுடன் அக்டோபர் 8 ஆம் தேதி விளையாடுகிறது.

இந்நிலையில் இந்திய அணியை குறித்து முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் பேசியுள்ளார். இது குறித்து அவர், ” 15 பேர் கொண்ட உலகக் கோப்பை இந்திய அணியில் கே.எல். ராகுல் மற்றும் இஷான் கிஷன் விக்கெட் கீப்பராக உள்ளனர். அதனால் யாரை கீப்பிங் செய்ய வைப்பது என்னும் கேள்வி பெரியதாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், ” கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக இருந்தால் 5-வது இடத்தில் பேட்டிங் செய்வார் ஸ்ரேயாஸ் 4வது இடத்தில் பேட்டிங் செய்வார். பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தரை விட அஸ்வின் சிறப்பாக விளையாடியதால் அஸ்வின் உலகக் கோப்பைக்கு விளையாட வாய்ப்புள்ளது. இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு அஸ்வின் பந்துவீச்சில் நம்பிக்கை உள்ளது” என்றும் கூறினார்.

அஸ்வின் உலகக்கோப்பையில் பங்குப் பெற்றால் அக்டோபர் 8 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரானப் போட்டியில் அஸ்வின் 8 வது இடத்தில் விளையாட வாய்ப்புள்ளது என்றும் கூறினார்.

கிட்டத்தட்ட 20 மாதங்கள் இந்தியாவின் 50 ஓவர் அணியில் இருந்து வெளியேறிய அஸ்வின், சமீபத்தில் முடிவடைந்த ஆசியக் கோப்பையில் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் காயம் அடைந்ததை அடுத்து, அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.

ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் அக்சர் படேல் பங்குபெற முடியாமல் போனபோதும் அவருக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் அணிக்குள் வந்தார். ஆனால் அந்த போட்டியில் பேட்டிங் செய்யவோ இல்லை பந்துவீசவோ சுந்தருக்கு வாய்ப்புக் கிடையில்லை.

அடுத்து நடைபெற்ற ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டியில் அஸ்வின் சிறப்பாக விளையாடி உள்ளதால் உலகக் கோப்பையில் இடம்பெற அஸ்வின்னுக்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது.

Tags: Cricketaswin cricket
ShareTweetSendShare
Previous Post

ரூ.50 லட்சம் வரை பயணக்காப்பீடு – அசத்தும் ஐ.ஆர்.சி.டி.சி

Next Post

இந்தியாவின் ராஜதந்திரம் புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies