அக்டோபர் 1 முதல் புதிய விதிமுறைகள் !
Jan 14, 2026, 05:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அக்டோபர் 1 முதல் புதிய விதிமுறைகள் !

நாடு முழுவதும் அக்டோபர் மாதம் 1 -ம் தேதி முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வர உள்ளன.

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 28, 2023, 10:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசு டி.சி.எஸ். கட்டணங்களை 5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தி உள்ளது. அதாவது, வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்பவர்கள் இனி ரூ.7 லட்சத்திற்கும் மேல் கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்தால், அக்டோபர் 1 முதல் 20 சதவீதம் டி.சி.எஸ். செலுத்த வேண்டும். அதற்குக் குறைவாகச் செலவு செய்தால் 5 சதவீதம் டி.சி.எஸ். செலுத்தினால் போதுமானது.

அடுத்து, வெளிநாட்டுக் கல்விக்காகக் கடன் பெறுபவர்களுக்கு ரூ.7 லட்சத்திற்கு மேல் பெற்றால் 0.5 சதவீதம் டி.சி.எஸ். விதிக்கப்படும். மேலும், மருத்துவம் மற்றும் கல்வி போன்ற செலவுகளுக்கு 5 சதவீதமாக டி.சி.எஸ். வசூலிக்கப்படும்.

டெல்லியில் வரும் 1 -ம் தேதி முதல் டீசல், ஜெனரேட்டர்களால் ஏற்படும் காற்று மாசை தடுக்கும் வகையில், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகள், அலுவலக பகுதிகள் உள்பட அனைத்துப் பிரிவிலும் பயன்படுத்தப்படும் டீசல் ஜெனரேட்டர் இயக்கத்தை முறைப்படுத்தப்பட உள்ளது.

அக்டோபர் 1-ம் தேதி முதல் பத்திரப் பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதிவு செய்யப்படும் சொத்துகள் குறித்த புகைப்படத்தையும், ஆவணமாக இணைக்க வேண்டும் எனப் பத்திரப் பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

புகழ் பெற்ற பழனி முருகன் திருக்கோவிலில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல அக்டோபர் 1-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போன், வீடியோ உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை, அதற்கு என ஒதுக்கப்பட்ட இடங்களில் ஒப்படைத்து விட்டு, மீண்டும் பெற்றுச் செல்லலாம்.

பிறப்பு மற்றும் இறப்பு திருத்தச் சட்டம் 2023, வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரஉள்ளது. அதன்படி, அரசு வேலை மற்றும் அனைத்து சேவைகளுக்கு ஒரே ஆவணமாகப் பிறப்பு சான்றிதழைப் பயன்படுத்த முடியும்.

அதாவது, அக்டோபர் 1-ம் தேதி முதல் மக்கள் தொகை பதிவு, வாக்காளர் பதிவு, ஆதார் எண், நியாயவிலைக்கடை கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், சொத்துப் பதிவு, கல்வி நிறுவனச் சேர்க்கை, திருமணப் பதிவு, அரசுப் பணி நியமனம் ஆகியவற்றிற்கு ஆவணமாகப் பிறப்பு சான்றிதழைப் பயன்படுத்த முடியும். எனவே, அரசின் புதிய சட்ட திட்டங்களை நினைவில் கொண்டால், எளிய வழியில் பயன்பெற முடியும்.

Tags: government of indiaaadhaar carddeisel generatornew rules
ShareTweetSendShare
Previous Post

எஸ்.ஐ. தேர்வில் முறைகேடு – தேர்வர்கள் பரபரப்பு புகார்!

Next Post

செப்டம்பர் 30- மறக்கமுடியுமா?

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies