அக்டோபர் 1 முதல் புதிய விதிமுறைகள் !
Sep 13, 2026, 12:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அக்டோபர் 1 முதல் புதிய விதிமுறைகள் !

நாடு முழுவதும் அக்டோபர் மாதம் 1 -ம் தேதி முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வர உள்ளன.

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 28, 2023, 10:28 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய அரசு டி.சி.எஸ். கட்டணங்களை 5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தி உள்ளது. அதாவது, வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்பவர்கள் இனி ரூ.7 லட்சத்திற்கும் மேல் கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்தால், அக்டோபர் 1 முதல் 20 சதவீதம் டி.சி.எஸ். செலுத்த வேண்டும். அதற்குக் குறைவாகச் செலவு செய்தால் 5 சதவீதம் டி.சி.எஸ். செலுத்தினால் போதுமானது.

அடுத்து, வெளிநாட்டுக் கல்விக்காகக் கடன் பெறுபவர்களுக்கு ரூ.7 லட்சத்திற்கு மேல் பெற்றால் 0.5 சதவீதம் டி.சி.எஸ். விதிக்கப்படும். மேலும், மருத்துவம் மற்றும் கல்வி போன்ற செலவுகளுக்கு 5 சதவீதமாக டி.சி.எஸ். வசூலிக்கப்படும்.

டெல்லியில் வரும் 1 -ம் தேதி முதல் டீசல், ஜெனரேட்டர்களால் ஏற்படும் காற்று மாசை தடுக்கும் வகையில், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகள், அலுவலக பகுதிகள் உள்பட அனைத்துப் பிரிவிலும் பயன்படுத்தப்படும் டீசல் ஜெனரேட்டர் இயக்கத்தை முறைப்படுத்தப்பட உள்ளது.

அக்டோபர் 1-ம் தேதி முதல் பத்திரப் பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதிவு செய்யப்படும் சொத்துகள் குறித்த புகைப்படத்தையும், ஆவணமாக இணைக்க வேண்டும் எனப் பத்திரப் பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

புகழ் பெற்ற பழனி முருகன் திருக்கோவிலில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல அக்டோபர் 1-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போன், வீடியோ உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை, அதற்கு என ஒதுக்கப்பட்ட இடங்களில் ஒப்படைத்து விட்டு, மீண்டும் பெற்றுச் செல்லலாம்.

பிறப்பு மற்றும் இறப்பு திருத்தச் சட்டம் 2023, வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரஉள்ளது. அதன்படி, அரசு வேலை மற்றும் அனைத்து சேவைகளுக்கு ஒரே ஆவணமாகப் பிறப்பு சான்றிதழைப் பயன்படுத்த முடியும்.

அதாவது, அக்டோபர் 1-ம் தேதி முதல் மக்கள் தொகை பதிவு, வாக்காளர் பதிவு, ஆதார் எண், நியாயவிலைக்கடை கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், சொத்துப் பதிவு, கல்வி நிறுவனச் சேர்க்கை, திருமணப் பதிவு, அரசுப் பணி நியமனம் ஆகியவற்றிற்கு ஆவணமாகப் பிறப்பு சான்றிதழைப் பயன்படுத்த முடியும். எனவே, அரசின் புதிய சட்ட திட்டங்களை நினைவில் கொண்டால், எளிய வழியில் பயன்பெற முடியும்.

Tags: government of indiaaadhaar carddeisel generatornew rules
Share
Tweet
SendShare
Previous Post

எஸ்.ஐ. தேர்வில் முறைகேடு – தேர்வர்கள் பரபரப்பு புகார்!

Next Post

செப்டம்பர் 30- மறக்கமுடியுமா?

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies