அக்டோபர் 1 முதல் புதிய விதிமுறைகள் !
Jul 29, 2026, 04:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அக்டோபர் 1 முதல் புதிய விதிமுறைகள் !

நாடு முழுவதும் அக்டோபர் மாதம் 1 -ம் தேதி முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வர உள்ளன.

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 28, 2023, 10:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசு டி.சி.எஸ். கட்டணங்களை 5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தி உள்ளது. அதாவது, வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்பவர்கள் இனி ரூ.7 லட்சத்திற்கும் மேல் கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்தால், அக்டோபர் 1 முதல் 20 சதவீதம் டி.சி.எஸ். செலுத்த வேண்டும். அதற்குக் குறைவாகச் செலவு செய்தால் 5 சதவீதம் டி.சி.எஸ். செலுத்தினால் போதுமானது.

அடுத்து, வெளிநாட்டுக் கல்விக்காகக் கடன் பெறுபவர்களுக்கு ரூ.7 லட்சத்திற்கு மேல் பெற்றால் 0.5 சதவீதம் டி.சி.எஸ். விதிக்கப்படும். மேலும், மருத்துவம் மற்றும் கல்வி போன்ற செலவுகளுக்கு 5 சதவீதமாக டி.சி.எஸ். வசூலிக்கப்படும்.

டெல்லியில் வரும் 1 -ம் தேதி முதல் டீசல், ஜெனரேட்டர்களால் ஏற்படும் காற்று மாசை தடுக்கும் வகையில், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகள், அலுவலக பகுதிகள் உள்பட அனைத்துப் பிரிவிலும் பயன்படுத்தப்படும் டீசல் ஜெனரேட்டர் இயக்கத்தை முறைப்படுத்தப்பட உள்ளது.

அக்டோபர் 1-ம் தேதி முதல் பத்திரப் பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதிவு செய்யப்படும் சொத்துகள் குறித்த புகைப்படத்தையும், ஆவணமாக இணைக்க வேண்டும் எனப் பத்திரப் பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

புகழ் பெற்ற பழனி முருகன் திருக்கோவிலில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல அக்டோபர் 1-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போன், வீடியோ உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை, அதற்கு என ஒதுக்கப்பட்ட இடங்களில் ஒப்படைத்து விட்டு, மீண்டும் பெற்றுச் செல்லலாம்.

பிறப்பு மற்றும் இறப்பு திருத்தச் சட்டம் 2023, வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரஉள்ளது. அதன்படி, அரசு வேலை மற்றும் அனைத்து சேவைகளுக்கு ஒரே ஆவணமாகப் பிறப்பு சான்றிதழைப் பயன்படுத்த முடியும்.

அதாவது, அக்டோபர் 1-ம் தேதி முதல் மக்கள் தொகை பதிவு, வாக்காளர் பதிவு, ஆதார் எண், நியாயவிலைக்கடை கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், சொத்துப் பதிவு, கல்வி நிறுவனச் சேர்க்கை, திருமணப் பதிவு, அரசுப் பணி நியமனம் ஆகியவற்றிற்கு ஆவணமாகப் பிறப்பு சான்றிதழைப் பயன்படுத்த முடியும். எனவே, அரசின் புதிய சட்ட திட்டங்களை நினைவில் கொண்டால், எளிய வழியில் பயன்பெற முடியும்.

Tags: government of indiaaadhaar carddeisel generatornew rules
ShareTweetSendShare
Previous Post

எஸ்.ஐ. தேர்வில் முறைகேடு – தேர்வர்கள் பரபரப்பு புகார்!

Next Post

செப்டம்பர் 30- மறக்கமுடியுமா?

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies