பூமி வெள்ளி கோளாக மாற போகிறது - இஸ்ரோ தலைவர் சோம்நாத் !
Mar 15, 2026, 08:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பூமி வெள்ளி கோளாக மாற போகிறது – இஸ்ரோ தலைவர் சோம்நாத் !

இந்தியா அடுத்த இலக்கு வெள்ளி கிரகமே !

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 28, 2023, 10:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தொடர்ந்து பல சாதனைகளை செய்து வருகிறது. குறிப்பாக சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி சந்திரனில் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை தரையிறக்கி பல்வேறு ஆய்வுகளை செய்து அங்கிருந்து தரவுகளை பெற்றது. உலகில் வேறு எந்த விஞ்ஞானிகளும் செய்ய முடியாத சாதனையை இஸ்ரோ இந்த விஷயத்தில் சாதித்து கட்டியது.

சந்திரயான் திட்டம் வெற்றி பெற்ற ஒரு சில நாட்களிலேயே இஸ்ரோ அடுத்த ஆய்வுக்காக தயாராகி கடந்த 2ம் தேதி ஆதித்யா எல்1 என்ற விண்களத்தை சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணிற்கு அனுப்பியது.

இந்நிலையில் இஸ்ரோ சேர்மன் சோமநாத் சமீபத்தில் டெல்லியில் உள்ள தேசிய அறிவியல் அகாடமி என்ற இடத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது அவர் இந்தியா அடுத்து வெள்ளி கோளை ஆய்வு செய்ய தயாராகி வருவதாகவும் வெள்ளி கோளுக்கு ராக்கெட் அனுப்ப பேலோடுகள் தயாராகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது: ” இஸ்ரோவிடம் பல கான்செப்ட் திட்டங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று வெள்ளி கோளுக்கு ராக்கெட் அனுப்பி ஆய்வு செய்யும் திட்டம். தற்போது இந்த ஆய்வுக்காக பேலோடுகள் எல்லாம் தயாராகிவிட்டது. வெள்ளி கோள் என்பது ஆய்வு செய்வதற்கான பல சுவாரசியங்கள் நிறைந்த கோளாக இருக்கிறது.

வெள்ளி கோளில் அட்மாஸ்பியர் உள்ளது. இந்த அட்மாஸ்பியர் அதிக திடமானதாக இருக்கிறது. பூமியை விட 100 மடங்கு அதிக அழுத்தம் கொண்ட அட்மாஸ்பியர் வெள்ளிக்கோளில் உள்ளது. பூமியிலிருந்து பார்க்கும்போது வெள்ளி கோளின் மேல் பரப்பு கடினமானதாக இருக்கிறதா அல்லது திரவ வடிவில் இருக்கிறதா என்பது தெரியவில்லை. இதை அங்கு சென்று ஆய்வு செய்தால் தான் நம்மால் கணித்து சொல்ல முடியும்.

வெள்ளிக்கோளை ஆய்வு செய்வதற்கு பின்னால் மிகப்பெரிய நோக்கம் ஒன்று இருக்கிறது. இந்த பூமி என்று வேண்டுமானாலும் வெள்ளி கோளாக மாற வாய்ப்புள்ளது. இன்று இல்லை என்றாலும் ஒரு 10,000 ஆண்டுகளுக்குப் பிறகு பூமி தனது தன்மையை மாற்றி வெள்ளிக் கோள் போல உருவாக வாய்ப்பு உள்ளது” என்று கூறினார்.

மேலும் அவர், “தற்போது பூமி எப்படி இருக்கிறதோ இப்படியாக 10,000 ஆண்டுகளுக்கு முன்பு இல்லை. பூமி தன்னைத்தானே மாற்றிக் கொண்டே வருகிறது இப்படியாக அது வெள்ளி கோள் போல மாறினால் என்ன நடக்கும் என்பதை நாம் இப்பொழுது ஆய்வு செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பூமி சூரியனிலிருந்து இரண்டாவது கோளாக இருக்கிறது. அது மட்டுமல்ல பூமியின் பக்கத்து கோளாக இருப்பதால் இதைப் பற்றி ஆய்வு செய்து நாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாக உள்ளது. வெள்ளி கோளட பூமியின் டிவின் என கூறலாம். அந்த அளவிற்கு பூமிக்கும் வெள்ளிக் கோளுக்கும் அதிகமான ஒற்றுமைகள் உள்ளன.” என்று கூறினார்.

Tags: ISROvenussomnath isro director
ShareTweetSendShare
Previous Post

கிரிக்கெட்டில் இந்தியா அபார வெற்றி !

Next Post

ஸ்மார்ட் சிட்டி திட்டம்: விருது பெற்ற 3 மாநகராட்சிகள் – எது தெரியுமா?

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies