அஸ்ஸாம்-மேகாலயா எல்லையில் மீண்டும் மோதல்!
Jan 14, 2026, 05:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அஸ்ஸாம்-மேகாலயா எல்லையில் மீண்டும் மோதல்!

வில், அம்புகளுடன் இரு தரப்பினர் ஆவேசம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 28, 2023, 11:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அஸ்ஸாம் மற்றும் மேகாலயா மாநிலங்களின் எல்லையில் இரு மாநில மக்களுக்கிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. வில், அம்பு மற்றும் கவண்களுடன் மோதிக்கொண்டனர். எனினும், உயிர்ச் சேதம் எதுவும் இல்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 1972-ம் ஆண்டு அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து மேகாலயா மாநிலம் தனியாக பிரிக்கப்பட்டது. இரு மாநிலங்களும் சுமார் 884 கி.மீ. தூர எல்லையை பகிர்ந்து கொண்டிருக்கின்றன. இதனால், மாநிலங்கள் பிரிக்கப்பட்டது முதல் இரு மாநிலங்களுக்கும் இடையே எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. 12 இடங்களில் நடந்து வரும் மோதலில் இரு மாநில மக்களுக்கும் மோதிக் கொள்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.

கடந்தாண்டு நவம்பர் மாதம் முக்ரோ பகுதியில் மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த கிராம மக்களுக்கும், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த வனத்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, மோதலை தடுக்க காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த 5 கிராம மக்கள் மற்றும் அஸ்ஸாம் வனத்துறையைச் சேர்ந்த காவலர் என மொத்தம் 6 பேர் உயரிழந்தனர்.

இவ்வாறு இரு மாநிலங்களுக்கு இடையே எல்லையில் அடிக்கடி மோதல் போக்கு நிலவி வருவதால், இரு மாநில முதல்வர்கள் இடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்தாண்டு நடந்த பேச்சுவார்த்தையின்போது மத்திய அரசின் சமரசத்தால் இரு மாநில அரசுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அடுத்த மாதம் இரு மாநில முதல்வர்கள் இடையேயான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவிருக்கிறது.

இந்த நிலையில்தான், மேகாலயாவின் மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்துக்கும், அஸ்ஸாம் மாநிலத்தின் மேற்கு கர்பி அங்லாங் மாவட்டத்துக்கும் இடையேயான எல்லையில் அமைந்திருக்கும் லபங்காப் கிராமத்தில் நேற்று இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, இருதரப்பினரும் வில், அம்பு மற்றும் கவண்களை பயன்படுத்தி ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். எனினும், இந்த மோதலில் உயிர்ச்சேதம் இல்லை.

இச்சம்பவத்தால் இரு மாநில எல்லையில் பதற்றம் நீடிக்கிறது. இது தொடர்பான காணொளிக் காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதையடுத்து, இரு மாநில எல்லைக் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்திருக்கின்றனர். மோதல் நடந்த இடத்தில் கிராம மக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்க்கும் வகையில் இரு மாநில காவல்துறையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனால், இன்று காலை பதற்றம் தணிந்து நிலைமை அமைதியாக மாறியிருக்கிறது.

Tags: AssamMehalayaBorderClash
ShareTweetSendShare
Previous Post

முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டாக்டர் மோகன் பகவத்  !

Next Post

லதா மங்கேஷ்கர் பிறந்தநாள்!- பிரதமர் மோடி வாழ்த்து .

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies