இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்ற பெருமைக்குரியவரும், சர்வதேச அளவில் பல விருதுகள் பெற்றவருமான பத்மபூஷன் எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவிற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது இரங்கலை தெரிவித்துள்ளார.
வேளாண் துறையில் மிகப்பெரிய விஞ்ஞானியான எம்.எஸ். சுவாமிநாதன், இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். வேளாண் துறையில் பல்வேறு சாதனைகள் புரிந்த இவர், வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.
இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்ற பெருமைக்குரியவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சர்வதேச அளவில் பல விருதுகள் பெற்றவருமான பத்மபூஷன் திரு. எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன்.
அவரது குடும்பத்தினருக்கு @BJP4Tamilnadu சார்பாக… pic.twitter.com/MmqG3L93sr
— K.Annamalai (@annamalai_k) September 28, 2023
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்ற பெருமைக்குரியவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சர்வதேச அளவில் பல விருதுகள் பெற்றவருமான பத்மபூஷன் எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன். அவரது குடும்பத்தினருக்கு தமிழக பாஜக
சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன். ஓம் சாந்தி! எனத் தெரிவித்துள்ளார்.