மதுரா ரயில் விபத்து- காரணம் என்ன ?
Mar 15, 2026, 02:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரா ரயில் விபத்து- காரணம் என்ன ?

Murugesan M by Murugesan M
Sep 28, 2023, 06:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா இரயில் விபத்தில், ஓட்டுனர் செல் ஃபோனைப் பார்த்து கெண்டு இரயிலை இயக்கியது காணொலியில் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா இரயில் நிலையத்தில் கடந்த 26 ஆம் தேதி மின்சார இரயில் தடம் புரண்டு, நடைமேடையில் ஏறி நின்றது. இந்த விபத்து தொடர்பாக ஐந்து இரயில்வே ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Mathura Train accident caught on camera pic.twitter.com/gLyvZMlRyT

— Harsh Tyagii (@tyagiih5) September 28, 2023

இதுகுறித்து இரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இரயிலைக் கையாளும் போது சச்சின் என்ற ஊழியர் குடித்துவிட்டு, தனது செல் ஃபோனைப் பார்த்துக் கொண்டிருந்தார் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் காணொலி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. க்ரூ வாய்ஸ் மற்றும் வீடியோ ரெக்கார்டிங் சிஸ்டம் (சிவிவிஆர்எஸ்) படி, இரயில் நடைமேடைக்கு வந்த பிறகு, சச்சின் இன்ஜினுல் நுழையும் போதே செல்பேசியை கையில் வைத்தவாறு, கவனக்குறைவாக தனது பையை என்ஜின் த்ரோட்டில் மீது வைத்துவிட்டு மீண்டும் தனது செல்பேசியில் கவனம் செலுத்தினார். சிறுது நேரத்தில் இரயில் நடைமேடையை நோக்கி நகர்வதைக் காணலாம்.

த்ரோட்டில் பையின் அழுத்தத்தைக் கையாள முடியாமல் இரயில் முன்னோக்கிச் சென்று, பிளாட்பாரத்தின் முட்டுக்கட்டையை உடைத்து ஏறிநின்றது தெரிய வந்துள்ளது.

பின்னர் சச்சினுக்கு ப்ரீத் அனலைசர் சோதனையும் நடத்தப்பட்டது, அதில் 47 மி.கி/100 மி.லி அளவு இருந்தது, அவர் லேசாக குடிபோதையில் இருந்ததும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக விசாரணையில், இரவு 10:49 மணிக்கு மதுரா ஸ்டேஷனுக்கு இரயில் வந்த பிறகு, லோகோ பைலட் தனது பணியிலிருந்து வெளியேறினார், அதைத் தொடர்ந்து சாவியை எடுக்க சச்சின் வண்டியில் நுழைந்தார். அவர் வண்டிக்குள் நுழைந்த சில நொடிகளில், ரயில் நகரத் தொடங்கியது, முட்டுக்கட்டையை உடைத்து, அதன் பாதி பகுதி நடைமேடையில் ஏறியது தெரிய வந்துள்ளது. இது குறித்து அடுத்தகட்ட விசாரணையை இரயில்வே துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: train accident
ShareTweetSendShare
Previous Post

காவல்துறை சார்ந்த எழுத்துத் தேர்விலும் முறைகேடு- அண்ணாமலை கண்டனம்!

Next Post

கெஜ்ரிவால் பங்களா முறைகேடு: சி.பி.ஐ. முதற்கட்ட விசாரணை அறிக்கை பதிவு!

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies