சிறுத்தை விவகாரம்: திருப்பதி நடைபாதையில் வல்லுனர் குழு ஆய்வு!
Jul 26, 2025, 06:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறுத்தை விவகாரம்: திருப்பதி நடைபாதையில் வல்லுனர் குழு ஆய்வு!

Web Desk by Web Desk
Sep 28, 2023, 06:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பதி அலிபிரி நடைப்பாதையில் 6 வயது சிறுமியை சிறுத்தை இழுத்துச் சென்று கடித்துக் கொன்றதைத் தொடர்ந்து, அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமேட்டு நடைப்பாதையில் வல்லுனர் குழு ஆய்வு செய்தது.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருக்கும் திருமலை ஏழுமலையான் கோவில் மிகப்பெரிய ஆன்மிக சுற்றுலாத் தலமாகத் திகழ்ந்து வருகிறது. தென் மாநிலங்கள் மட்டுமின்றி வடமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். மேலும், இந்தியாவைப் பொறுத்தவரை கோடி கோடியாகப் பணம் கொட்டும் கோவில் என்றால் அது திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில்தான்.

இந்த நிலையில், திருப்பதியிலுள்ள சேஷாசலம் வனப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. சமீபத்தில், திருப்பதியிலிருந்து திருமலைக்குச் செல்லும் அலிபிரி நடைபாதையில் சென்ற 6 வயது சிறுமியை, சிறுத்தை ஒன்று இழுத்துச் சென்று கடித்துக் கொன்றது. இதனால், பக்தர்கள் அலிபிரி நடைப்பாதையில் பயணம் மேற்கொள்ள அச்சமடைந்தனர். தவிர, திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்குச் செல்வதற்கும் தயக்கமடைந்தனர்.

இதையடுத்து, அலிபிரி நடைப்பாதையில் ஆந்திர வனத்துறையினர் இரும்பு கூண்டு வைத்து சிறுத்தையை பிடித்தனர். இதனால் ஏழுமலையான் பக்தர்கள் நிம்மதியடைந்தனர். ஆனால், சிறுத்தைகள் நடமாட்டம் சி.சி.டி.வி. கேமராவில் தொடர்ந்து பதிவானது. இதைத் தொடர்ந்து, கூண்டுகள் தொடர்ந்து வைக்கப்பட்டதில், அடுத்தடுத்து 6 சிறுத்தைகள் சிக்கின. இது பக்தர்களுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தியது.

ஆகவே, அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மேட்டு நடைப்பாதையில் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து வல்லுனர் குழு ஆய்வு செய்தது. விசாகப்பட்டினம் வன விலங்கு சரணாலயத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் ரமேஷ், அசுதேஷ் சிங், சாகன் பிரசாத் மகாஜன் ஆகியோர் அலிபுரி நடைப்பாதையில் ஆய்வு செய்தனர். அப்போது, நடைப்பாதையில் செல்லும் பக்தர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர்.

குறிப்பாக, சிறுமியை சிறுத்தை அடித்துக் கொன்ற லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் அருகே ஆய்வு மேற்கொண்ட குழுவினர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நடைப்பாதையில் தடுப்பு வேலி அமைப்பதால் நிரந்தரத் தீர்வு காண முடியாது. மற்ற வழிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். வனவிலங்குகள் நடைப்பாதைக்கு வருவதை பக்தர்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பாதுகாப்பு முறைகளை செயல்படுத்த முடியும்” என்றனர். பின்னர், இதுகுறித்தும் ஆய்வுக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

Tags: leopardtirupathiOfficers
ShareTweetSendShare
Previous Post

2023 ஜூலையில் கனிம உற்பத்தி 10.7% அதிகரிப்பு!

Next Post

 3 கோடி காணிக்கை!.. திருச்செந்தூரில் பக்தர்கள் தாராளம்!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies