சிறுத்தை விவகாரம்: திருப்பதி நடைபாதையில் வல்லுனர் குழு ஆய்வு!
Mar 15, 2026, 09:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறுத்தை விவகாரம்: திருப்பதி நடைபாதையில் வல்லுனர் குழு ஆய்வு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 28, 2023, 06:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பதி அலிபிரி நடைப்பாதையில் 6 வயது சிறுமியை சிறுத்தை இழுத்துச் சென்று கடித்துக் கொன்றதைத் தொடர்ந்து, அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமேட்டு நடைப்பாதையில் வல்லுனர் குழு ஆய்வு செய்தது.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருக்கும் திருமலை ஏழுமலையான் கோவில் மிகப்பெரிய ஆன்மிக சுற்றுலாத் தலமாகத் திகழ்ந்து வருகிறது. தென் மாநிலங்கள் மட்டுமின்றி வடமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். மேலும், இந்தியாவைப் பொறுத்தவரை கோடி கோடியாகப் பணம் கொட்டும் கோவில் என்றால் அது திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில்தான்.

இந்த நிலையில், திருப்பதியிலுள்ள சேஷாசலம் வனப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. சமீபத்தில், திருப்பதியிலிருந்து திருமலைக்குச் செல்லும் அலிபிரி நடைபாதையில் சென்ற 6 வயது சிறுமியை, சிறுத்தை ஒன்று இழுத்துச் சென்று கடித்துக் கொன்றது. இதனால், பக்தர்கள் அலிபிரி நடைப்பாதையில் பயணம் மேற்கொள்ள அச்சமடைந்தனர். தவிர, திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்குச் செல்வதற்கும் தயக்கமடைந்தனர்.

இதையடுத்து, அலிபிரி நடைப்பாதையில் ஆந்திர வனத்துறையினர் இரும்பு கூண்டு வைத்து சிறுத்தையை பிடித்தனர். இதனால் ஏழுமலையான் பக்தர்கள் நிம்மதியடைந்தனர். ஆனால், சிறுத்தைகள் நடமாட்டம் சி.சி.டி.வி. கேமராவில் தொடர்ந்து பதிவானது. இதைத் தொடர்ந்து, கூண்டுகள் தொடர்ந்து வைக்கப்பட்டதில், அடுத்தடுத்து 6 சிறுத்தைகள் சிக்கின. இது பக்தர்களுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தியது.

ஆகவே, அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மேட்டு நடைப்பாதையில் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து வல்லுனர் குழு ஆய்வு செய்தது. விசாகப்பட்டினம் வன விலங்கு சரணாலயத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் ரமேஷ், அசுதேஷ் சிங், சாகன் பிரசாத் மகாஜன் ஆகியோர் அலிபுரி நடைப்பாதையில் ஆய்வு செய்தனர். அப்போது, நடைப்பாதையில் செல்லும் பக்தர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர்.

குறிப்பாக, சிறுமியை சிறுத்தை அடித்துக் கொன்ற லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் அருகே ஆய்வு மேற்கொண்ட குழுவினர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நடைப்பாதையில் தடுப்பு வேலி அமைப்பதால் நிரந்தரத் தீர்வு காண முடியாது. மற்ற வழிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். வனவிலங்குகள் நடைப்பாதைக்கு வருவதை பக்தர்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பாதுகாப்பு முறைகளை செயல்படுத்த முடியும்” என்றனர். பின்னர், இதுகுறித்தும் ஆய்வுக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

Tags: leopardtirupathiOfficers
ShareTweetSendShare
Previous Post

2023 ஜூலையில் கனிம உற்பத்தி 10.7% அதிகரிப்பு!

Next Post

 3 கோடி காணிக்கை!.. திருச்செந்தூரில் பக்தர்கள் தாராளம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies