3 கோடி காணிக்கை!.. திருச்செந்தூரில் பக்தர்கள் தாராளம்!
Aug 25, 2026, 04:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

 3 கோடி காணிக்கை!.. திருச்செந்தூரில் பக்தர்கள் தாராளம்!

Murugesan M by Murugesan M
Sep 28, 2023, 06:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் வருமானமாக ரூபாய் 2.93 கோடி கிடைத்துள்ளது.

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு, தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலம், வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

இவ்வாறு, கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனைப் பல்வேறு வகைகளில் செலுத்துகின்றனர். குறிப்பாக, தங்கம், பணம், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றைக் காணிக்கையாக உண்டியலில் செலுத்துகின்றனர். இவ்வாறு பக்தர்கள் செலுத்தும் காணிக்கையானது, மாதந்தோறும் எண்ணப்படுகிறது.

அதன்படி, கோவில் உண்டியலிலிருந்து பக்தர்கள் செலுத்திய காணிக்கைப் பொருட்கள் அதிகாரிகள் முன்னிலையில் பாதுகாப்புடன் கோயில் மண்டபத்துக்குக் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து கோயில் ஊழியர்களின் உதவியுடன் பணம், தங்கம், வெள்ளி பொருட்கள், வெளிநாட்டு கரன்சிகள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு எண்ணும் பணி நடந்தது. காணிக்கை எண்ணும் பணியில் தன்னார்வலர்கள், கோயில் பணியாளர்கள், ஈடுட்டனர்.

இதில், கோவிலின் நிரந்தர உண்டியல் மூலம் 2 கோடியே 76 இலட்சத்து 88 ஆயிரத்து 763 ரூபாயும், ஆவணி திருவிழாவை முன்னிட்டு வைக்கப்பட்ட தற்காலிக உண்டியல் மூலம் 25 ஆயிரத்து 520 ரூபாயும், கோசாலை பராமரிப்பு உண்டியல் மூலம் 19 ஆயிரத்து 711 ரூபாயும், யானை பராமரிப்பு உண்டியல் மூலம் 1 இலட்சத்து 13 ஆயிரத்து 89 ரூபாயும், கோவில் அன்னதானம் மூலம் 15 இலட்சத்து 8 ஆயிரத்து 214 ரூபாயும், மேல கோவில் உண்டியல் மூலம் 15 ஆயிரத்து 113 ரூபாயும், நாசரேத் கோவில் மூலம் 1,315 ரூபாயும், கிருஷ்ணாபுரம் கோவில் மூலம் 7ஆயிரத்து 432 ரூபாயும் என மொத்தம் ரூபாய் 2 கோடியே 93 இலட்சத்து 80 ஆயிரத்து 32 கிடைத்தது.
இதுதவிர தங்கச் சங்கிலி, மோதிரம், சிறிய வேல் உள்ளிட்ட 2,100 கிராம் மதிப்பிலான தங்கப்பொருட்களும், 19 கிலோ 35 கிராம் வெள்ளியால் செய்யப்பட்ட பொருட்களும், 423 வெளிநாட்டு கரன்சிகளும் கிடைத்துள்ளன.

Tags: tiruchendur temple
Share
Tweet
SendShare
Previous Post

சிறுத்தை விவகாரம்: திருப்பதி நடைபாதையில் வல்லுனர் குழு ஆய்வு!

Next Post

பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூபாய் 5 கோடி!

Related News

முதல் தலைமுறை மாணவர்களுக்கு முழு கல்வி கட்டண விலக்கு; தமிழக அரசு அறிவிப்பு

ஒரு கழுதையின் விலை ரூ.3 லட்சம் : சீனாவிற்கு ஏற்றுமதியாகும் பாகிஸ்தான் கழுதைகள் – சிறப்பு தொகுப்பு!

டெல்லியில் நாளை கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் – நீர் திறப்பு குறித்து ஆலோசனை!

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் – பேரவையில் இபிஎஸ் வலியுறுத்தல்!

பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து பேச அனுமதி மறுப்பு – திமுக வெளிநடப்பு!

பத்மஸ்ரீ விருது பெற்ற தாமோதரனின் சுயசரிதை நூல் – ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்!

Load More

அண்மைச் செய்திகள்

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகை முதல் ஆண்டுக்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர் – முதல்வர் விஜய் அறிவிப்பு!

அக்டோபர் 2 முதல் மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படும் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் – ஈரான் எச்சரிக்கை!

எரிவாயு தட்டுப்பாடு : வங்கதேசத்தில் தொழிற்சாலைகள் மூடல்!

சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை: தரமணியில் அதிகபட்சமாக 49.5 மி.மீ பதிவு!

இறுதிக்கட்டத்தில் இந்திய அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் – செர்ஜியோ கோர் தகவல்!

காரைக்காலில் சிகிச்சைக்காக அரசு ஆம்புலன்சில் சென்ற பெண், ஆக்சிஜன் டியூப் வெடித்து உயிரிழந்த சோகம்!

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தேசிய பாதுகாப்பு வியூக மாநாடு – பயங்கரவாதம், போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை!

திறமையாளர்களின் முதல் தேர்வாக இந்தியாவை மாற்ற வேண்டும்; பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies