பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த முதல்தலைமுறை மாணவர்களுக்கு முழு கல்வி கட்டண விலக்கு வழங்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறைக்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அவர், 6 ஆயிரம் உதவிப் பேராசிரியர்கள் மூன்று கட்டமாக நியமிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.
கௌரவ விரிவுரையாளர்களின் ஊதியம் 30 ஆயிரத்திலிருந்து 35 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும்,அரசு பலவகை கல்லூரிகளில் பணிபுரிபவர்களின் தொகுப்பூதியம் 25 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
செயற்கை கோள் வடிவமைக்கும் திட்டத்திற்காக, தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியியல் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 10 திட்டங்களுக்கு 5 லட்சம் வீதம் 50 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் கூறினார்.
தமிழ்நாட்டிற்கென தனித்துவமான அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை உருவாக்கப்படும் என குறிப்பிட்ட அமைச்சர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த முதல் தலைமுறை மாணவர்களுக்கு முழுமையான கட்டண விலக்கு வழங்கப்படும் என்று அறிவித்தார்.
















