வங்கதேசத்தில் கடுமையான இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் உரத் தொழிற்சாலைகள் உட்பட நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் உற்பத்தியை குறைத்துள்ளதுடன், சில ஆலைகள் மூடப்பட்டுள்ளன. எரிவாயு பற்றாக்குறையால் மின்சார உற்பத்தியும் பாதிக்கப்பட்டு, வீடுகளில் சமையலுக்கான கேஸ் விநியோகம் தடைபட்டிருக்கிறது.
சிஎன்ஜி வாகனங்களும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், வங்கதேசத்தில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
















