தமிழக அரசு நிறுவனங்கள், சுமார் ஒரு லட்சத்து 81 ஆயிரம் கோடி கடன் சுமையில் தவிப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அரசு பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள் உள்ளிட்டவை, தங்களின் சார்பில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களுக்காக வங்கிகள், மத்திய நிதி நிறுவனங்களில் கடன் வாங்குகின்றன.
அந்த வகையில் இரு வகையிலும் வாங்கிய மொத்த கடன், 3 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.
இந்நிலையில், கடந்த ஜூலை நிலவரப்படி, தமிழக அரசின் உத்தரவாதத்துடன் 24 பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள் மற்றும் கழகங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் வைத்துள்ள கடன் நிலுவை, ஒரு லட்சத்து 81 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நுகர்பொருள் வாணிப கழகம் உள்ளிட்ட 10 பொது நிறுவனங்களின் கடன் 36 ஆயிரத்து 256 கோடி ரூபாயாகவும்,
11 வாரியங்கள் மற்றும் கழகங்களின் கடன் ஒரு லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாயாகவும்,
மூன்று கூட்டுறவு நிறுவனங்களின் கடன் 152 கோடி ரூபாயாகவும் உள்ளது தெரியவந்துள்ளது.
















