நிலத்திற்கு பட்டா வழங்கும் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் லஞ்சம் கேட்டதாகசென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரமேஷ் பிரபு குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜி.ஆர் ரமேஷ் பிரபு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது கடந்த 1978 கொண்டு வந்த நில உச்சவரம்பு சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற்றாலும் தமிழகம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் இன்னும் திரும்ப பெறாமல் இருப்பதாக குறிப்பிட்டார்.
நில உச்சவரம் சட்டத்தின் கீழ் அடையாளம் கண்டு கையகப்படுத்தாமல் இருந்த நிலங்களை ஏற்கனவே இருந்த நில உரிமையாளர்கள் மனைகளாக பிரித்து விற்பனை செய்துள்ளதாகவும்,
நில உச்ச வரம்பு சட்டத்தின் கீழ் அடையாள காணப்பட்ட சம்பந்தப்பட்ட நிலங்களை வரன்முறை படுத்தி பட்டா வழங்க கடந்த 1998 மற்றும் 2008 ம் ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் நடைமுறைபடுத்தமால் முந்தைய அதிமுக, திமுக அரசுகள் செயல்பட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.
குறிப்பாக முந்தைய அதிமுக ஆட்சியில் வருவாய்த்துறை அமைச்சராக இருந்த ஆர் பி உதயகுமார் வரைமுறை படுத்துவதற்கு, ஒரு கிரவுண்ட் நில மதிப்பில் 20 சதவீதம் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பட்டா வழங்கப்படும் என நிர்பந்தம் செய்தாகவும். திமுக ஆட்சி காலத்திலும் அதே போன்று லஞ்சம் பெறப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
தற்போது சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களின் சொத்துக்களுக்கு பட்டா இல்லாமல் இருப்பதால், புதிய அரசாணை வெளியிட்டு தற்போதைய வரை மனு அளித்தவர்களுக்கு உரிய முறையில் வரன்முறைப்படுத்தி நிலங்களுக்கான பட்டா உள்ளிட்ட வருவாய் ஆவணங்கள் வழங்க வேண்டும் என அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்ட தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
















