தமிழகத்தைச் சேர்ந்த இரு ஆசிரியர்கள், புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு ஆசிரியர் என மூன்று பேருக்கு இந்தாண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
புளியம்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி ஆசிரியர் தங்கராஜ், மதுரை PM SHRI கேந்திரிய வித்யாலயா ஆசிரியர் அமுதா ஆகியோர் தமிழகத்தின் சார்பில் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியைச் சேர்ந்த ஆசிரியர் கணேசனும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளார். மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தியது, புதுமையான கற்பித்தல் முறைகளை செயல்படுத்தியது உள்ளிட்ட சிறப்பு பங்களிப்புகளுக்காக இந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ஆம் தேதி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலைமையில் நடைபெறும் விழாவில் விருது வழங்கப்பட உள்ளது.
















