மாணவர்கள் போராட தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் விவகாரத்தில் அரசின் தலையீடு எதுவும் இல்லை என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கம்யூனிஸ்ட் கட்சியினரின் தகவல்கள் சேகரிக்கப்பட்டது மாவட்ட ஆட்சியருக்கே தெரியாது என கூறினார்.
குஜிலியம்பாறை வட்டாட்சியர் சொந்த வெறுப்பில் கம்யூனிஸ்ட் விவரங்களை சேகரிக்க உத்தரவிட்டுள்ளார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
















