டெல்லியில் பாஜக தலைமையகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட தேசியப் பொறுப்பாளர்கள் குழுவை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.
டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், கட்சியின் அமைப்பு ரீதியான செயல்பாடுகள் மற்றும் மக்களுடனான தொடர்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து, புதிய தேசியப் பொறுப்பாளர்களுடன் பிரதமர் மோடி குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இதுதொடர்பான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த பிரதமர் மோடி, அமைப்பு ரீதியான ஆலோசனைக் கூட்டங்கள் புதிய கருத்துகள் மற்றும் கண்ணோட்டங்களைப் பரிமாறிக்கொள்ளவும், கட்சியை வலுப்படுத்தவும், மக்களுடனான தொடர்பை ஆழப்படுத்தவும் உதவும் என குறிப்பிட்டுள்ளார்.
















