தவெகவுக்கு ஆதரவாக செயல்பட்ட 21 அதிமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கையை கைவிடுவது சரியானது என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தலைவணங்குவதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழக வெற்றி கழக தலைமையிலான அரசு வெளிப்படை தன்மையோடு செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
“எம்எல்ஏக்கள் மக்கள் சேவை செய்ய வேண்டும் என்பதாக பேரவை நிகழ்வுகள் நேரலை செய்யப்படுகிறது என்றும், பள்ளிக்கல்வித்துறைக்கு பல்வேறு திட்டங்களை அரசு அறிவிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்,
தமிழக அரசுடன் மக்கள் துணையாக நின்று, அவகாசம் தந்தால் பல திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும் ஜேசிடி பிரபாகர் குறிப்பிட்டார்.
















