சென்னையில் காலமான பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடலுக்கு, திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில், 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள சௌகார் ஜானகி, சென்னையில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது உடல் தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலுக்கு அரசு சார்பில், சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், அமைச்சர்கள் வெங்கட்ரமணன், ராஜ்மோகன் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
செளகார் ஜானகியின் உடலுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர்கள் சிவகுமார், சத்யராஜ், நாசர், நடிகை ஷாலினி உள்ளிட்டோர், சௌகார் ஜானகியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
















