உலக நாடுகள் பலவும் பொருளாதார சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்தியா மட்டும் வளர்ச்சிக்கான நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியாவில் அரசியல் நிலைத்தன்மையும், கொள்கைகளில் தொடர்ச்சியும் இருப்பதாக கூறினார்.
அனைத்துத் துறைகளிலும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், உற்பத்தியை அதிகரிக்க ஊக்கத்தொகைகள் வழங்கப்படுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேலும், சீர்திருத்தங்களுக்கான தெளிவான கண்ணோட்டத்தில் இந்தியா முன்னேறி வருவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
















