இந்தியாவின் கடல்சார் வர்த்தகத்தில் புதிய அத்தியாயம் : இனி வெளிநாட்டு துறைமுகங்களுக்கு "NO" : விழிஞ்சத்தில் முழுமையான ஏற்றுமதி- இறக்குமதி தொடக்கம் - சிறப்பு தொகுப்பு!
Aug 21, 2026, 11:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் கடல்சார் வர்த்தகத்தில் புதிய அத்தியாயம் : இனி வெளிநாட்டு துறைமுகங்களுக்கு “NO” : விழிஞ்சத்தில் முழுமையான ஏற்றுமதி- இறக்குமதி தொடக்கம் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 21, 2026, 09:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவின் கடல்சார் வர்த்தகத்தில் புதிய அத்தியாயமாக உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பல்கள் வந்து செல்லும் ஆழ்கடல் துறைமுகமான கேரளாவின் விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தில் முழுமையான ஏற்றுமதி–இறக்குமதி EXIM செயல்பாடுகள் தொடங்கியுள்ளன. இதன் மூலம் வெளிநாட்டு துறைமுகங்களைச் சார்ந்திருந்த இந்தியாவின் கண்டெய்னர் வர்த்தகத்திற்கு மாற்று வழி கிடைத்துள்ளது.

திருவனந்தபுரம் அருகே அமைந்துள்ள விழிஞ்சம்…சர்வதேச கப்பல் பாதையிலிருந்து சுமார் 10 கடல் மைல் தொலைவு…18 முதல் 20 மீட்டர் இயற்கை ஆழம்…

உலகின் மிகப்பெரிய Ultra Large Container Vessels எனப்படும் ULCV கப்பல்களைக் கையாளும் திறன்…இதுவே விழிஞ்சத்தின் மிகப்பெரிய பலம். 2024 டிசம்பர் முதல் வணிகச் செயல்பாடுகள் தொடங்கிய நிலையில் இதுவரை 2.28 மில்லியனுக்கும் அதிகமான TEU சரக்குகளையும், 1,100-க்கும் மேற்பட்ட கப்பல்களையும் கையாண்டுள்ளது. 24,346 TEU திறன் கொண்ட உலகின் மிகப்பெரிய கண்டெய்னர் கப்பல்களில் ஒன்றான MSC Irina கப்பலையும் விழிஞ்சம் வெற்றிகரமாக கையாண்டுள்ளது.

இதுவரை இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் பல கண்டெய்னர் சரக்குகள், இந்தியாவுக்கு வரும் சரக்குகள், இடைத்துறைமுகங்களாக செயல்படும் வெளிநாட்டு துறைமுகங்கள் வழியாக மறுஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.

குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட வெளிநாட்டு துறைமுகங்களைச் சார்ந்திருக்கும் நிலை இருந்தது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு விழிஞ்சம் துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தபோது, இந்தியாவின் சுமார் 75 சதவீத transshipment நடவடிக்கைகள் வெளிநாட்டு துறைமுகங்களில் நடைபெற்றதாகவும், இதனால் நாட்டிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இப்போது அந்த நிலை மாறுகிறது. விழிஞ்சத்தில் EXIM செயல்பாடுகள் தொடங்கியிருப்பதன் மூலம் இந்திய சரக்குகள் இந்திய துறைமுகத்திலேயே நேரடியாக ஏற்றுமதி–இறக்குமதி செய்யப்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இதன் மூலம் இந்தியாவின் கடல்சார் வர்த்தகத்தில் உருவாகும் மதிப்பில் ஒரு பெரிய பகுதி இந்தியாவுக்குள்ளேயே தங்கும் வாய்ப்பு உருவாகிறது.வெளிநாட்டு transshipment துறைமுகங்களைச் சார்ந்திருந்தது குறைகிறது..

விழிஞ்சத்தில் EXIM செயல்பாடுகள் தொடங்கியிருப்பதன் மூலம் இந்திய சரக்குகளை நேரடியாக உலக சந்தைகளுக்கு அனுப்புவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. இதனால் இந்தியாவின் ஏற்றுமதி போட்டித்திறன் அதிகரிக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கேரள முதலமைச்சர் சதீஷன் தெரிவித்துள்ளார்.

விழிஞ்சத்தின் பலன் கேரளாவுடன் நின்றுவிடவில்லை. தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் தொழில் வளர்ச்சிக்கும் புதிய வாய்ப்பை உருவாக்குகிறது.கோயம்புத்தூர், திருப்பூர், பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கிய தொழில் மற்றும் உற்பத்தி மையங்களிலிருந்து உலக சந்தைகளுக்கு சரக்குகளை அனுப்புவதற்கான புதிய கடல் வழியாக விழிஞ்சம் மாறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார் விழிஞ்சம் துறைமுகத்தை நிர்வகிக்கும் அதானி போர்ட்ஸ் சிஇஓ அஸ்வனி குப்தா.

விழிஞ்சம் துறைமுகத்தில் 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டாம் கட்ட விரிவாக்கம் நடைபெற உள்ளது. இந்த விரிவாக்கம் 2028 டிசம்பருக்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு துறைமுகங்களைச் சார்ந்திருந்த இந்தியாவின் கண்டெய்னர் வர்த்தகத்திற்கு விழிஞ்சம் ஒரு புதிய மாற்று வழியைத் திறந்துள்ளது. தென்னிந்தியாவின் தொழில் உற்பத்தியை உலக சந்தையுடன் இணைக்கும் புதிய கடல் வாசலாக உருவெடுத்துள்ளது.

Tags: maritime trade.foreign ports.ThiruvananthapuramVizhinjam International Port.Full-scale import-exportKerala’s Vizhinjam International Port
Share
Tweet
SendShare
Previous Post

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார் – தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் இரங்கல்

Related News

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார் – தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் இரங்கல்

உள்நாட்டு உற்பத்திக்கே முன்னுரிமை : 405 பாதுகாப்பு தளவாட இறக்குமதிக்கு தடை : பாய்ச்சல் காட்டும் இந்தியா – சிறப்பு தொகுப்பு!

உடல்நலக்குறைவு – சிறையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு இம்ரான் கான் மாற்றம்!

ஓணம் பண்டிகை – திருவனந்தபுரம் மக்கள் மாளிகையில் கொண்டாட்டம்!

டெல்லியில் பரவும் பன்றிக்காய்ச்சல் – ஜெ.பி.நட்டா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை!

டெல்லியில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் கடல்சார் வர்த்தகத்தில் புதிய அத்தியாயம் : இனி வெளிநாட்டு துறைமுகங்களுக்கு “NO” : விழிஞ்சத்தில் முழுமையான ஏற்றுமதி- இறக்குமதி தொடக்கம் – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏக்களுக்கு கார் வேண்டாம் – பேரவையில் உதயநிதி அறிவிப்பு!

டெல்டா விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு நிதியை உடனே வழங்கிடுக – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

தயாநிதி மாறன் வழக்கில் தொலைத்தொடர்புத் துறை செயலாளரை நீதிமன்ற சாட்சியாக ஆஜர்படுத்த இடைக்கால தடை – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

100 சிறிய ரக விமானங்கள் வாங்க கோவை ஸ்கைவொர்க்ஸ் ஏவியேஷன் நிறுவனம் ஒப்பந்தம்!

மின் கட்டணம் உயர்ந்துள்ளதா? – பேரவையில் தவெக, திமுக உறுப்பினர்கள் கடும் வாக்குவாதம்!

ஏஐ தொழில்நுட்பத்தில் இறுதி முடிவெடுப்பது மனிதன் மையமாக இருக்க வேண்டும் – பிரதமர் மோடி

சென்னை ஐ.ஐ.டி-யில் எம்.பி.பி.எஸ்., எம்.டி. மருத்துவப் படிப்புகள் இயக்குநர் காமகோடி தகவல்!

எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் ரசாயனக் கழிவுகள் கலப்பு இல்லை : அமைச்சர் ராஜீவ் விளக்கம்!

ஊழல் கோப்புகளை முதலமைச்சர் ஏன் திறக்கவில்லை? – உதயநிதி கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies