மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகள் மந்தமாக நடைபெறுகிறது - பக்தர்கள் குற்றச்சாட்டு!
Aug 23, 2026, 11:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகள் மந்தமாக நடைபெறுகிறது – பக்தர்கள் குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 23, 2026, 11:52 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா அடுத்த மாதம் 17-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திருப்பணிகள் மந்தமாக நடைபெறுவதாக பக்தர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இது குறித்த செய்தித்தொகுப்பை தற்போது காணலாம்.

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. 2018ஆம் ஆண்டில் கோவிலின் வீரவசந்தராயர் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 2021ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை.

இந்த நிலையில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு செப்டம்பர் 17-ஆம் தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஓராண்டிற்கும் மேலாக கோவில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால் மந்த நிலையில் திருப்பணிகள் நடைபெறுவதாகவும் அப்பணிகளில் சில குறைகள் இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. கடந்த கும்பாபிஷேகத்தின் போது நிரப்பப்பட்ட வரகரிசி மற்றும் தானியங்கள் கலசங்களில் மாற்றப்படாமல் உள்ளதாக பக்தர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

அம்மன் சன்னதி கோபுரக் கலசங்கள் சாய்ந்த நிலையில் உள்ளதாகவும், ஒரு கலசம் இன்னும் வைக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், கோபுரங்களின் அடிப்பகுதியில் உள்ள சிலைகள் சேதமடைந்து இருப்பதாகவும், செடி-கொடிகள் அகற்றப்படாமல் திருப்பணிகள் நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரங்கள் பழுதடைந்து கிடப்பதுடன், போதிய கழிப்பறை வசதிகளும் செய்து தரப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இடிந்து விழும் நிலையில் உள்ள பழமையான கட்டடங்களின் மீது பக்தர்கள் ஏற வாய்ப்புள்ளதால் அவற்றைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்துள்ளது.

கோவிலை சுற்றியுள்ள சாலைகள் மற்றும் நடைபாதைகள் மிகவும் சேதம் அடைந்துள்ளதால் அவற்றை மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும் என்றும் வணிக நோக்கத்தைத் தவிர்த்து, அனைத்துத் தரப்பு பக்தர்களும் எளிதாக சாமி தரிசனம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் எனவும் பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ஆகம விதிகளின்படி பணிகளை விரைந்து முடித்து, அனைத்து அடிப்படை வசதிகளையும் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகமும் கோவில் நிர்வாகமும் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags: Meenakshi Amman Temple KumbabishekamKumbabishekamMadurai Meenakshi Amman TempleAmman Sannidhi
Share
Tweet
SendShare
Previous Post

அனைத்து முதுநிலை கோயில்களிலும் செல்போன் பாதுகாப்பு கவுண்டர்கள் – அமைச்சர் ரமேஷ் தகவல்!

Related News

அனைத்து முதுநிலை கோயில்களிலும் செல்போன் பாதுகாப்பு கவுண்டர்கள் – அமைச்சர் ரமேஷ் தகவல்!

ராக்கெட் பாகங்களை எடுத்துச் செல்ல பழைய மிதிவண்டிகள் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

வெளிநாட்டினருக்கு விசா வழங்க விதித்திருந்த தடையை நீக்கியது அமெரிக்க நீதிமன்றம்!

ஒடிசாவின் பாரதீப் துறைமுகம் அருகே பனாமா சரக்கு கப்பல் விபத்து – மீட்பு பணி தீவிரம்!

அசிம் முனீரிடம் குவியும் அதிகாரம் : முடியரசு ஆகும் பாகிஸ்தான் – இந்தியாவிற்கு சொல்லும் செய்தி என்ன? – சிறப்பு தொகுப்பு!

நிலத்திற்கு பட்டா வழங்க லஞ்சம் கேட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் – வழக்கறிஞர் ரமேஷ் பிரபு குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகள் மந்தமாக நடைபெறுகிறது – பக்தர்கள் குற்றச்சாட்டு!

கம்யூனிஸ்ட் கட்சியினரின் தகவல்கள் சேகரிக்கப்பட்டது மாவட்ட ஆட்சியருக்கே தெரியாது – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக தேசியப் பொறுப்பாளர்கள் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

“பார்த்த ஞாபகம் இல்லையோ” : நடிகை சௌகார் ஜானகி கடந்து வந்த பாதை- சிறப்பு தொகுப்பு!

நாட்டை சீர்குலைக்க நடந்த சதி முறியடிப்பு : பாகிஸ்தான் கைக்கூலியான Shehzad Bhatti நெட்வொர்க் அழிக்கப்பட்டது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

திமுக நிர்வாகிகளுக்கு வயது வரம்பு நிர்ணயம் – 13 பேரின் பதவி பறிப்பு?

உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தலைவணங்குகிறேன் – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

நடிகை சௌகார் ஜானகி உடலுக்கு சபாநாயகர், அமைச்சர்கள் நேரில் அஞ்சலி – தமிழக அரசு சார்பில் மரியாதை!

கூலிப்படை தலைவர்களாக மாறி வரும் தவெக நிர்வாகிகள் – நயினார் நாகேந்திரன்!

திமுக மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு – வயது வரம்பு 70 ஆக நிர்ணயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies