மூலவர் சிலைகள், விக்ரகங்களை வீடியோ எடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,அனைத்து முதுநிலை கோயில்களிலும் செல்போன் பாதுகாப்பு கவுண்டர்கள் அமைக்கப்படும் என்றும் அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருப்பதாக தெரிவித்தார்.
சுவாமி தரிசனத்திற்கு முன்பே பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பு மையங்களில் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பக்தர்கள் அமைதியான முறையில் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பதே அறநிலையத்துறையின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
















