ஒடிசாவின் பாரதீப் துறைமுகம் அருகே பனாமா சரக்கு கப்பல் வங்கக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஒடிசாவில் இருந்து பனாமா நாட்டு கொடியுடன் சரக்கு கப்பல் ஒன்று சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டு சென்றது.
சரக்கு கப்பலில், சீனா, மியான்மர், வங்கதேசத்தைச் சேர்ந்த 24 ஊழியர்கள் இருந்ததாகவும், பாரதீப் துறைமுகம் அருகே சென்றபோது திடீரென வங்கக்கடலில் மூழ்கி சரக்கு கப்பல் விபத்துக்குள்ளானதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து வந்த இந்திய கடலோர காவல்படையினர், கடற்படையினர் இணைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், சரக்கு கப்பல் கடலில் கவிழ்ந்த விபத்தில் 2 ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், மாயமான 22 ஊழியர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், வங்கக்கடல் வழியாக செல்லும் மற்ற கப்பல்களையும் மீட்புப்பணியில் உதவ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
















