தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே குரும்பூர் ரயில் நிலையப் பகுதியில் உள்ள 140 ஆண்டுகள் பழமையான விநாயகர் கோயில் இடிக்கப்பட்டதைக் கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் அரசுராஜா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கோயிலை இடித்து அகற்றிய ரயில்வே நிர்வாகத்தைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இடிக்கப்பட்ட கோயிலை மீண்டும் அதே இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
















