கேரளத்தில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கோயிலில் இன்று ஒரே நாளில் 437 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
திருச்சூரில் பிரசித்திபெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் ஆவணி மாத முகூர்த்த நாட்களில் அதிகளவில் திருமணங்கள் நடைபெறும். அந்த வகையில் இன்று, குருவாயூர் கோயிலில் 437 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
குருவாயூர் வரலாற்றில் முதல்முறையாக இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான திருமணங்கள் நடைபெறுவது இதுவே முதல்முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு திருமணத்துக்கு என்ன வசதிகள் தேவைப்படுமோ, அவை அனைத்தையும் குருவாயூர் தேவஸ்தானம் செய்துள்ளதாக, கோயிலில் திருமணம் செய்து கொண்ட புதுமணத் தம்பதியர் தெரிவித்தனர்.
















