டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் 2 நாள் தேசிய பாதுகாப்பு வியூக மாநாடு இன்று தொடங்குகிறது.
டெல்லியில் இன்றும், நாளையும் நடைபெறவுள்ள பாதுகாப்பு வியூக மாநாட்டில், உயர் போலீஸ் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் உட்பட 850-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
பயங்கரவாதம், உள்நாட்டு பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து மாநாட்டில் ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் மற்றும் வளர்ந்து வரும் முக்கியப் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
















