இந்தியா–அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் கொள்கை அளவில் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டதாக அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தத்தின் சட்ட மற்றும் தொழில்நுட்பக் கொள்கைகளை இறுதி செய்யும் பணி மட்டுமே நடைபெற்று வருவதாக அவர் கூறினார். இரு நாடுகளுக்கும் சாதகமான வகையில் ஒப்பந்தத்தை நிறைவு செய்ய தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
















