அன்னப்பூரணி சூப்பர் 6 திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஆண்டிற்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், போர் சூழல் காரணமாக சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதாகவும், அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
வரும் பொங்கல் பண்டிகை முதல் அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம் அமலுக்கு வரும் என்றும், இதற்காக ஆண்டுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் எனவும் கூறினார்.
மேலும், எரிவாயு சிலிண்டருக்கான விலை நேரடியாக பயனாளிகளின் கணக்கில் வரவு வைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
















