மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டத்தை விரிவுபடுத்தும் வகையிலான வெற்றி பயண திட்டம் அக்டோபர் 2ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், சமூக நீதி சிந்தனையுடன் மகளிர் கட்டணமில்லா பேருந்து திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும்,
வெற்றிப் பயணம் திட்டம் தேசத் தந்தை மகாத்மா காந்தி பிறந்தநாளில் அக். 2ஆம் தேதி முதல் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
முதல்கட்டமாக மாநகரம் மற்றும் நகரப் பகுதிகளில் இயங்கும் விரைவு, எல்எஸ்எஸ், டீலக்ஸ் பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளலாம் என்றும்,
கூடுதலாக மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் மற்றும் மலைப் பகுதிகளில் சாதரண கட்டணப் பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளலாம் எனவு
கட்டணமில்லா பேருந்து திட்டத்தில், வருமான உச்ச வரம்பு அல்லது மேற்கொள்ளும் பயண எண்ணிக்கையிலோ எந்தக் கட்டுப்பாடுகளும் நிர்ணயிக்கப்படாது என்றும்,
வெற்றிப் பயண திட்டம் இதர சேவைகளிலும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.
வெற்றி பயண திட்டத்தின் மூலம் மாணவிகள் தொலைதூரக் கல்வி நிலையங்கள் செல்லவும், மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு செல்ல கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
மேலும், இந்த திட்டத்தின்கீழ், மாற்றுப் பாலினத்தவர்களான திருநர்களும் பயன்பெறலாம் என்றும்,
இந்த திட்டத்தை செயல்படுத்த தோராயமாக ஆண்டுக்கு 6 ஆயிரம் கோடி செலவினம் ஏற்படும் எனவும் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
















