பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடுவதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் விஜய், சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையம் தற்போது ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளை கையாளும் திறனைக் கொண்டுள்ளதாக கூறினார்.
வளர்ந்து வரும் சென்னை மாநகரின் தேவையைக் கருத்தில் கொண்டும், சரக்கு விமான சேவையை ஊக்குவிக்கவும் புதிய விமான நிலையம் தேவை என்ற நிலை உள்ளது எனவும் தெரிவித்தார்.
ஆனால், முந்தைய அரசு விவசாயிகள் பாதிக்கும் வகையில் குடியிருப்புகளை அதிகம் அகற்றும் வகையில் புதிய விமான நிலையத்தை அமைக்கும் முயற்சியை மேற்கொண்டது என்றும், ஏகனாபுரம் மற்றும் இதர கிராம மக்கள் நடத்திய போராட்டங்களை தாம் நேரில் சென்று பார்த்து அவர்களுக்கு துணையாக நின்றதாகவும் குறிப்பிட்டார்.
விவசாயிகள் பாதிக்காத வகையில், குடியிருப்புகளை அகற்றாத வகையில் விமான நிலையம் அமைய வேண்டும் என்று தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக கூறிய அவர்,
பரந்தூரில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்க எடுக்கப்பட்டு வந்த நடவடிக்கை கைவிடப்படுவதாக அறிவித்தார்.
மேலும், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் விரிவுபடுத்தப்படும் என்றும், விவசாய நிலங்கள் அதிகம் பாதிக்கப்படாத வகையில் இடம் பரிசீலனை செய்யப்பட்டு புதிய விமான நிலையம் அமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
















