பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து பேச சபாநாயகர் அனுமதி வழங்காததைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் விஜய், பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார்.
அப்போது, பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆனால், முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டதால், அது குறித்து பேச திமுகவினருக்கு அனுமதி அளிக்க முடியாது என சபாநாயகர் தெரிவித்தார்.
அப்போது திமுகவினர் அனைவரும் எழுந்து நின்று கோஷமிட்டதால், அனைவரும் வெளியே சென்று கோஷமிடுங்கள் என சபாநாயகர் கூறினார். இதனை அடுத்து திமுகவினர் உடனடியாக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
















