திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பத்மஸ்ரீ விருது பெற்ற தாமோதரனின் சுயசரிதை நூலை முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்.
திருச்சியில் சமூகப் பணியாளரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான தாமோதரனின் வாழ்க்கைப் பயணத்தைப் பதிவு செய்யும் “வாய்மை என்பது யாதெனின்” என்ற சுயசரிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நூலை வெளியிட்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஏழை, எளிய மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதில் தாமோதரனின் பணி பாராட்டுக்குரியது என தெரிவித்தார். மேலும், இந்தியாவில் பிறந்த அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதற்காக தாமோதரன் செயல்பட்டு வருகிறார் என புகழாரம் சூட்டினார்.
















