உலகக்கோப்பையில் அஸ்வின் இடம் பெறுவாரா : ராகுல் டிராவிட் விளக்கம் !
Oct 26, 2025, 06:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகக்கோப்பையில் அஸ்வின் இடம் பெறுவாரா : ராகுல் டிராவிட் விளக்கம் !

Web Desk by Web Desk
Sep 28, 2023, 06:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட அணியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதில் அளித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிவடைந்துவிட்டது. நாளை மறுநாள் உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் இந்தியாவிற்கு வந்துள்ளனர்.

இதனிடையே உலகக்கோப்பை தொடருக்காக தேர்வு செய்யப்பட்ட வீரர்களில் மாற்றங்கள் செய்ய இன்றே கடைசி நாளாகும். இதனால் இந்திய அணியில் காயமடைந்த அக்சர் படேலுக்கு பதிலாக ஆப் ஸ்பின்னராக ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் அக்சர் படேலின் காயம் குறித்த முழுமையான விளக்கம் இன்று அளிக்கப்படும் என்று பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசுகையில், உலகக்கோப்பை அணியில் மாற்றம் இருக்கிறதா, ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு அதிகாரப்பூர்வமாக விரைவில் பதில் அளிக்கப்படும். தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் உடன் என்சிஏ நிர்வாகிகள் நல்ல தொடர்பை கொண்டுள்ளனர்.

அதனால் அந்த விவகாரம் குறித்து பேச முடியாது. ஒருவேளை உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் மாற்றம் இருந்தால் நிச்சயம் அறிவிக்கப்படும். ஆனால் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்திய அணியை பொறுத்தவரை சில வீரர்களுக்கு வைரல் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் சில வீரர்கள் சொந்த காரணங்களுக்காக வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அதேபோல் ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா உள்ளிட்டோர் ஆசிய போட்டிகளுக்கான சீனா புறப்பட்டுள்ளனர். அதன் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடைசி போட்டியில் 13 வீரர்களே இருந்தனர். இந்திய அணியை பொறுத்தவரை இன்று இரவு அல்லது நாளை காலை கவுகாத்தியில் கூடவுள்ளனர். உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் ஒரு வாரம் உள்ளது. அதற்குள் இந்திய அணியில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் சரி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags: world Cup Cricketaswin cricketrahul dravid
ShareTweetSendShare
Previous Post

“சனாதனம்” பாடம் நீக்கப்படும் – அமைச்சர் கருத்துக்குக் கண்டனம்

Next Post

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு – மூழ்கிய தரைப்பாலம்!

Related News

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies