தைவானின் புதிய நீர்மூழ்கிக் கப்பல் தயார்!
Mar 15, 2026, 08:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தைவானின் புதிய நீர்மூழ்கிக் கப்பல் தயார்!

முதல்முறையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 29, 2023, 02:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவுக்கு பதிலடி கொடுக்க தைவானும் தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, முதல் முறையாக உள்நாட்டிலேயே நீர்மூழ்கி போர்க்கப்பலை தயாரித்திருக்கிறது.

சீனாவின் ஒரு பகுதியாக இருந்த தைவான் 1949-ம் ஆண்டு தனிநாடாக பிரிந்தது. எனினும், தைவானை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. மேலும், அந்நாட்டை எப்படியாவது மீண்டும் தங்களுடன் இணைத்துவிட வேண்டும் என்று சீனா துடித்து வருகிறது. இதற்காக, தைவான் எல்லையில் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி போர்ப்பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

மேலும், சீனா இராஜதந்திர ரீதியாகவும் தைவானை தனிப்படுத்தி இருக்கிறது. அதேசமயம், சீனாவுக்கு பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக தைவானும் கூறியிருக்கிறது. எனவே, தைவான் நாட்டின் தற்காப்புக்கான செலவை அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, தற்பாதுகாப்புக்காக 2024-ம் ஆண்டுக்கான நிதியாக 19 பில்லியன் டாலரை ஒதுக்கி இருக்கிறது.

இந்தத் தொகை, தனது நெருங்கிய பங்காளியான அமெரிக்காவிடம் இருந்து இராணுவக் கருவிகளை வாங்குவதற்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறது. அதேசமயம், நீர்மூழ்கிக் கப்பலை பெறுவதில் தைவானுக்கு சில இடையூறுகள் இருந்தன. எனவே, சொந்த நாட்டிலேயே நீர்மூழ்கிக் கப்பலை தயாரிக்க முடிவு செய்தது.

இதையடுத்து, கடந்த 2016-ம் ஆண்டு 8 நீர்மூழ்கிக் கப்பலை தயாரிக்கும் வகையில், புதிய திட்டம் ஒன்றை தொடங்கியது. இத்திட்டத்தின்படி, முதன் முறையாக “ஹாய் குன்” என்கிற நீர்மூழ்கி போர்க்கப்பலை தயாரித்திருக்கிறது. இக்கப்பலின் அறிமுக விழா காஹ்சியுங் நகரில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், அந்நாட்டு அதிபர் சாய் இங்வென் கலந்துகொண்டு பேசுகையில், “தைவான் வரலாற்றில் இது முக்கியமான நாளாகும். முன்பெல்லாம் உள்ளூரில் நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்க இயலாது என்று கூறப்பட்டது. இன்றோ அனைவரும் வியக்கும் வகையில் ஒரு நீர்மூழ்கிக் கப்பலை நாமே வடிவமைத்தது மட்டுமின்றி, தயாரித்தும் இருக்கிறோம். நாம் சாதித்துவிட்டோம்” என்று கூறினார்.

இந்த நீர்மூழ்கி போர்க்கப்பலானது 229.6 அடி நீளம், 26.2 அடி அகலம் மற்றும் 59 அடி உயரம் கொண்டது. இது 3,000 டன் எடை வரையிலான பொருட்களை சுமந்து செல்லலாம். ஒரு சில சோதனைகளுக்கு பிறகு இக்கப்பல் அடுத்தாண்டு கடற்படையில் இணைக்கப்படும் என்று தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

Tags: taiwansubmarine
ShareTweetSendShare
Previous Post

திடக்கழிவுகளை நெடுஞ்சாலை கட்டுமானத்தில் பயன்படுத்த நடவடிக்கை – நிதின் கட்கரி!

Next Post

பிரபல நடிகர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் – நடந்தது என்ன?

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies