தைவானின் புதிய நீர்மூழ்கிக் கப்பல் தயார்!
Jul 24, 2025, 07:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தைவானின் புதிய நீர்மூழ்கிக் கப்பல் தயார்!

முதல்முறையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது!

Web Desk by Web Desk
Sep 29, 2023, 02:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவுக்கு பதிலடி கொடுக்க தைவானும் தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, முதல் முறையாக உள்நாட்டிலேயே நீர்மூழ்கி போர்க்கப்பலை தயாரித்திருக்கிறது.

சீனாவின் ஒரு பகுதியாக இருந்த தைவான் 1949-ம் ஆண்டு தனிநாடாக பிரிந்தது. எனினும், தைவானை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. மேலும், அந்நாட்டை எப்படியாவது மீண்டும் தங்களுடன் இணைத்துவிட வேண்டும் என்று சீனா துடித்து வருகிறது. இதற்காக, தைவான் எல்லையில் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி போர்ப்பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

மேலும், சீனா இராஜதந்திர ரீதியாகவும் தைவானை தனிப்படுத்தி இருக்கிறது. அதேசமயம், சீனாவுக்கு பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக தைவானும் கூறியிருக்கிறது. எனவே, தைவான் நாட்டின் தற்காப்புக்கான செலவை அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, தற்பாதுகாப்புக்காக 2024-ம் ஆண்டுக்கான நிதியாக 19 பில்லியன் டாலரை ஒதுக்கி இருக்கிறது.

இந்தத் தொகை, தனது நெருங்கிய பங்காளியான அமெரிக்காவிடம் இருந்து இராணுவக் கருவிகளை வாங்குவதற்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறது. அதேசமயம், நீர்மூழ்கிக் கப்பலை பெறுவதில் தைவானுக்கு சில இடையூறுகள் இருந்தன. எனவே, சொந்த நாட்டிலேயே நீர்மூழ்கிக் கப்பலை தயாரிக்க முடிவு செய்தது.

இதையடுத்து, கடந்த 2016-ம் ஆண்டு 8 நீர்மூழ்கிக் கப்பலை தயாரிக்கும் வகையில், புதிய திட்டம் ஒன்றை தொடங்கியது. இத்திட்டத்தின்படி, முதன் முறையாக “ஹாய் குன்” என்கிற நீர்மூழ்கி போர்க்கப்பலை தயாரித்திருக்கிறது. இக்கப்பலின் அறிமுக விழா காஹ்சியுங் நகரில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், அந்நாட்டு அதிபர் சாய் இங்வென் கலந்துகொண்டு பேசுகையில், “தைவான் வரலாற்றில் இது முக்கியமான நாளாகும். முன்பெல்லாம் உள்ளூரில் நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்க இயலாது என்று கூறப்பட்டது. இன்றோ அனைவரும் வியக்கும் வகையில் ஒரு நீர்மூழ்கிக் கப்பலை நாமே வடிவமைத்தது மட்டுமின்றி, தயாரித்தும் இருக்கிறோம். நாம் சாதித்துவிட்டோம்” என்று கூறினார்.

இந்த நீர்மூழ்கி போர்க்கப்பலானது 229.6 அடி நீளம், 26.2 அடி அகலம் மற்றும் 59 அடி உயரம் கொண்டது. இது 3,000 டன் எடை வரையிலான பொருட்களை சுமந்து செல்லலாம். ஒரு சில சோதனைகளுக்கு பிறகு இக்கப்பல் அடுத்தாண்டு கடற்படையில் இணைக்கப்படும் என்று தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

Tags: taiwansubmarine
ShareTweetSendShare
Previous Post

திடக்கழிவுகளை நெடுஞ்சாலை கட்டுமானத்தில் பயன்படுத்த நடவடிக்கை – நிதின் கட்கரி!

Next Post

பிரபல நடிகர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் – நடந்தது என்ன?

Related News

கிட்னி திருட்டில் தொடர்புடைய தனியார் மருத்துவமனை திமுக எம்.எல்.ஏவுக்கு சொந்தமானது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இரு மருத்துவமனைகளுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies