தைவானின் புதிய நீர்மூழ்கிக் கப்பல் தயார்!
Oct 25, 2025, 03:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தைவானின் புதிய நீர்மூழ்கிக் கப்பல் தயார்!

முதல்முறையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது!

Web Desk by Web Desk
Sep 29, 2023, 02:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவுக்கு பதிலடி கொடுக்க தைவானும் தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, முதல் முறையாக உள்நாட்டிலேயே நீர்மூழ்கி போர்க்கப்பலை தயாரித்திருக்கிறது.

சீனாவின் ஒரு பகுதியாக இருந்த தைவான் 1949-ம் ஆண்டு தனிநாடாக பிரிந்தது. எனினும், தைவானை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. மேலும், அந்நாட்டை எப்படியாவது மீண்டும் தங்களுடன் இணைத்துவிட வேண்டும் என்று சீனா துடித்து வருகிறது. இதற்காக, தைவான் எல்லையில் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி போர்ப்பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

மேலும், சீனா இராஜதந்திர ரீதியாகவும் தைவானை தனிப்படுத்தி இருக்கிறது. அதேசமயம், சீனாவுக்கு பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக தைவானும் கூறியிருக்கிறது. எனவே, தைவான் நாட்டின் தற்காப்புக்கான செலவை அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, தற்பாதுகாப்புக்காக 2024-ம் ஆண்டுக்கான நிதியாக 19 பில்லியன் டாலரை ஒதுக்கி இருக்கிறது.

இந்தத் தொகை, தனது நெருங்கிய பங்காளியான அமெரிக்காவிடம் இருந்து இராணுவக் கருவிகளை வாங்குவதற்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறது. அதேசமயம், நீர்மூழ்கிக் கப்பலை பெறுவதில் தைவானுக்கு சில இடையூறுகள் இருந்தன. எனவே, சொந்த நாட்டிலேயே நீர்மூழ்கிக் கப்பலை தயாரிக்க முடிவு செய்தது.

இதையடுத்து, கடந்த 2016-ம் ஆண்டு 8 நீர்மூழ்கிக் கப்பலை தயாரிக்கும் வகையில், புதிய திட்டம் ஒன்றை தொடங்கியது. இத்திட்டத்தின்படி, முதன் முறையாக “ஹாய் குன்” என்கிற நீர்மூழ்கி போர்க்கப்பலை தயாரித்திருக்கிறது. இக்கப்பலின் அறிமுக விழா காஹ்சியுங் நகரில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், அந்நாட்டு அதிபர் சாய் இங்வென் கலந்துகொண்டு பேசுகையில், “தைவான் வரலாற்றில் இது முக்கியமான நாளாகும். முன்பெல்லாம் உள்ளூரில் நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்க இயலாது என்று கூறப்பட்டது. இன்றோ அனைவரும் வியக்கும் வகையில் ஒரு நீர்மூழ்கிக் கப்பலை நாமே வடிவமைத்தது மட்டுமின்றி, தயாரித்தும் இருக்கிறோம். நாம் சாதித்துவிட்டோம்” என்று கூறினார்.

இந்த நீர்மூழ்கி போர்க்கப்பலானது 229.6 அடி நீளம், 26.2 அடி அகலம் மற்றும் 59 அடி உயரம் கொண்டது. இது 3,000 டன் எடை வரையிலான பொருட்களை சுமந்து செல்லலாம். ஒரு சில சோதனைகளுக்கு பிறகு இக்கப்பல் அடுத்தாண்டு கடற்படையில் இணைக்கப்படும் என்று தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

Tags: taiwansubmarine
ShareTweetSendShare
Previous Post

திடக்கழிவுகளை நெடுஞ்சாலை கட்டுமானத்தில் பயன்படுத்த நடவடிக்கை – நிதின் கட்கரி!

Next Post

பிரபல நடிகர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் – நடந்தது என்ன?

Related News

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

நெல்லை மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வனக்காவலர் கைது!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – சண்முக விலாஸ் மண்டபத்தில் கனிப்பந்தல்!

கும்பக்கரை, சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை நீட்டிப்பு!

மதுரை அனுப்பானடி பகுதியில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு!

வங்கி வாடிக்கையாளர்கள் இனி 4 வாரிசுதாரரை நியமிக்கலாம் – மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு!

பேச்சிப்பாறை அணை திறப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies